ஷ்யாம் நீயூஸ்
24.02.2023
தூத்துக்குடியில் பிட்காயின் மோசடி மேலும் ஒருவர் கைது.
தூத்துக்குடியில் முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது - ஒரு ஐ போன் பறிமுதல் எதிரியை கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார்.இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் மற்றும் வசந்தகுமார் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் ராமரை மோசடி செய்த கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் அன்பு கருணாகரன் (32) என்பவரை கடந்த 03.02.2023 அன்றும் மற்றொரு எதிரியான திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த எபினேசர் மகன் ஓபேத் பால் (38) என்பவரை கடந்த 16.02.2023 அன்றும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு எதிரியான திருவள்ளுர் மாவட்டம் புதூர் மின்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சீவ் குமார் (42) என்பவரை நேற்று (23.02.2023) அவரது வீட்டருகே வைத்து கைது செய்து அவரிடமிருந்த ஒரு ஐ போனையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மன சஞ்சீவ் குமாரின் தனியார் வங்கி கணக்கில் 01.04.2020 முதல் 20.02.2023 வரை ரூபாய் 2,13,44,882.95/-பணப்பரிமாற்றமும் மற்றொரு வங்கி கணக்கில் 18.04.2022 முதல் 20.02.2023 வரை ரூபாய் 3,10,72,841/-பணப்பரிமாற்றமும் மொத்தம் 5,24,17,643/- பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. மேலும் சுமார் 200 வங்கி கணக்குகளை எதிரி ஒபேத் பாலுக்கு அனுப்பி பணப்பரிமாற்றம் செய்யச்சொல்லி பல மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க உடந்தையாக எதிரி சஞ்சீவ் குமார் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மேலும் ஒரு எதிரியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
மேலும் இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு எதிரியான திருவள்ளுர் மாவட்டம் புதூர் மின்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சீவ் குமார் (42) என்பவரை நேற்று (23.02.2023) அவரது வீட்டருகே வைத்து கைது செய்து அவரிடமிருந்த ஒரு ஐ போனையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மன சஞ்சீவ் குமாரின் தனியார் வங்கி கணக்கில் 01.04.2020 முதல் 20.02.2023 வரை ரூபாய் 2,13,44,882.95/-பணப்பரிமாற்றமும் மற்றொரு வங்கி கணக்கில் 18.04.2022 முதல் 20.02.2023 வரை ரூபாய் 3,10,72,841/-பணப்பரிமாற்றமும் மொத்தம் 5,24,17,643/- பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. மேலும் சுமார் 200 வங்கி கணக்குகளை எதிரி ஒபேத் பாலுக்கு அனுப்பி பணப்பரிமாற்றம் செய்யச்சொல்லி பல மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க உடந்தையாக எதிரி சஞ்சீவ் குமார் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மேலும் ஒரு எதிரியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.