குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.
ஷ்யாம் நீயூஸ் 31.12.2022 குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர். குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கில் அங்கு குளித்து கொண்டிருந்த குழந்தையை வெள்ளநீர் இழுத்துச் சென்றது. ஆபத்தில் சிக்கி குழந்தையை தன் உயிர் பாராமல் மின்னல் வேகத்தில் காப்பாற்றி தூத்துக்குடி இளஞ்சரை தூத்துக்குடி ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 29 12 2022 அன்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு தனது காரில் குற்றாலம் சென்றுள்ளார். பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குளித்துக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை வெள்ளநீர் இழுத்துச் சென்றுள்ளது பொதுமக்கள் குழந்தை குழந்தை என கத்தவே சத்தம் கேட்டு அங்கு சென்ற விஜயகுமார் குழந்தை ஆபத்தில் சிக்கி உள்ளதை கண்டு தன்னுயிர் பாராமல் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை மின்னல் வேகத்தில் காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாருக்கு அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் பாராட்டினர். குழந்தை க...