முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.

 ஷ்யாம் நீயூஸ் 31.12.2022 குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.  குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கில் அங்கு குளித்து கொண்டிருந்த குழந்தையை வெள்ளநீர் இழுத்துச்  சென்றது. ஆபத்தில் சிக்கி குழந்தையை தன் உயிர் பாராமல் மின்னல் வேகத்தில் காப்பாற்றி தூத்துக்குடி இளஞ்சரை தூத்துக்குடி ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 29 12 2022 அன்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு தனது காரில் குற்றாலம் சென்றுள்ளார். பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குளித்துக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை வெள்ளநீர் இழுத்துச் சென்றுள்ளது பொதுமக்கள் குழந்தை குழந்தை என கத்தவே சத்தம் கேட்டு அங்கு சென்ற விஜயகுமார் குழந்தை ஆபத்தில் சிக்கி உள்ளதை கண்டு தன்னுயிர் பாராமல் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை மின்னல் வேகத்தில் காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாருக்கு அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் பாராட்டினர். குழந்தை க...

தூத்துக்குடி ஊராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் ஆட்சியருக்கு மனு!

 ஷ்யாம் நீயூஸ் 26.12.2022 தூத்துக்குடி ஊராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் ஆட்சியருக்கு மனு! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியுடன் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜுடன் இடித்து கட்டிடத்தில் உள்ள கதவு ஜன்னல் பொருட்களை விற்றதோடு அதில் உள்ள செங்கல் ஜல்லி மணல் ஆகியவற்றை பஞ்சாயத்து தலைவரின் ஊரான பெரியநாயகிபுரத்தில் உள்ள  தனது காலி மனை பள்ளமாக உள்ள இடத்தில் நிரப்புவதற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஒரு வாரம் நடைபெற்ற இந்த பரபரப்பு போராட்டத்திற்கு பின் இன்று காலான்கரை கிராம மக்கள் சார்பாக சமுதாய நலக்கூடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன்,  கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் அவரது கணவர் அதிசயராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம...

மத உணர்வை மதிக்கிறோம்! மத வெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

ஷ்யாம் நீயூஸ் 25.12.2022  மத உணர்வை மதிக்கிறோம்! மத வெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.    தூத்துக்குடி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டாம் கேட் போஸ்திடல், பிரையண்ட்நகர், ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்      போராசிரியருக்கு புகழ் சேர்க்கும் வகையில் 7500 கோடி திட்டத்தில் தமிழக பள்ளிகள் பாராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒன்றை ஆண்டு காலத்தில் 70 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்இ தேர்வு மூலம் தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலை என்ற சட்டத்தை கொண்டு வந்து தமிழர்களின் நலனை பாதுகாத்தது திமுக அரசு வடமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பதால் இந்த சட்டத்தை அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளோம் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்ப...

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

 ஷ்யாம் நீயூஸ் 25.12.2022 கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார் தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே சவேரியார்புரம் பகுதியில் கபடி குழு இருந்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த கபடி குழுவினர் பங்குபெற்று பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளனர்.  இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த கபடி வீரர் ஜென்சன் கபடி போட்டியொன்றில் விளையாடும் போது எதிர்பாராத வகையில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தகவல் அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கபடி வீரர் ஜென்சன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், கௌதம் மற்றும் சவேரியார்புரம் ஊர் இளைஞரணியினர், கபடி வீரர்கள் உடன் இருந்தனர்.

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 23.12.2022 தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சி சார்ந்த கிராமம் காலான்கரை. தனி கிராம்மாக பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வருகிறார் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயகுமார். .இக்கிராமத்திற்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் குழாய் பதிக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்திய பஞ்சாயத்து தலைவர் இதுவரை குடிநீர் வழங்காமல் குளத்து நீரையும் உப்பு நீரையும் கலந்து கொடுத்து வருகிறார் இதனால் அக்கிராம மக்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றன .அதே கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில  கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறார். தனி பட்டியலின மக்கள் வாழ்ந்துவரும் காலா...

சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு!

 ஷ்யாம் நீயூஸ் 23.12.2022 சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு! தூத்துக்குடியில்  தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணியின் சார்பாக  நேற்று முன்தினம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது அந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி பேசினால் வீட்டு வாசலில் காலை வெட்டுவோம் நாக்கை அறுப்பேன் என பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசி பரபரப்பு ஏற்படுத்தினார் இது தொடர்பாக திமுக மாணவர் அணி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட  செயலாளர் சீனிவாசன் என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கலவரத்தை தூண்டுவது போன்று சசிகலா புஷ்பா பேசியது தூத்துக்குடியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாத கோரம்பள்ளம் ஊராட்சி செயலர் பொதுமக்கள் அவதி!

 ஷ்யாம் நீயூஸ் 21.12.2022 கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாத கோரம்பள்ளம் ஊராட்சி செயலர் பொதுமக்கள் அவதி! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கோரம்பள்ளம் ஊராட்சி செயல் அலுவலராக பணிபுரிபவர் சீனிவாசன் இவருக்கு கம்ப்யூட்டர் என்பது என்னவென்றே தெரியாமல் அதை பயன்படுத்த தெரியாமலும் அலுவலகத்தில் இருந்து பொழுதை கழித்து வருகிறார். கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் வரி செலுத்த வரும்போது கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாததால் பாதி நேரம் வாடகைக்கு ஆள் பிடித்து கம்ப்யூட்டர் பில் போடுவதும் கம்ப்யூட்டருக்கு பில் போட ஆள் கிடைக்காத பட்சத்தில் பல நேரங்களில் பொதுமக்களை அழைக்களிப்பதும் ஆக இருந்து வருகிறார். வீட்டு வரி செலுத்த வரும் பொது மக்களை குடிநீர் வழியை செலுத்தினால் மட்டுமே வீட்டு வரி போட்டு தரப்படும் என்று கட்டாயப்படுத்துகிறார் குடிநீர் கட்டணம் செலுத்தினால் தான் வீட்டு வரி பதியப்படும் என்று எந்த சட்ட விதியும் இருப்பதாக தெரியவில்லை மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு எந்த விதமான முன்னுரிப்பு தகவல்களும் அனுப்பப்படாமல் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களிடம் அடாவடித்தனமாக ப...

பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்!

 ஷ்யாம் நீயூஸ் 19.12.2022 பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்! தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை  .இங்கு 2003 2005 ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏ ராஜம்மாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம்  கட்டித் தரப்பட்டது .அந்த சமுதாய கூடம் கட்டி 20 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு பஞ்சாயத்தால் கட்டிடத்தை இடிக்க  தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.  சமுதாய கூடத்தை இடிப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்படாத நிலையில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபாவின் கணவர்அதிசயராஜ் கட்டிடத்தை இடித்து  பல லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தில் உள்ள இரும்பு கதவுகள் ஜன்னல்கள் டி எம் டி கம்பிகள் போன்றவற்றை தன்னிச்சையாக எடுத்து விற்று விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்ச...

மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

ஷ்யாம் நீயூஸ் 12.12.2022  மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு தூத்துக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ஊராட்;சி மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணியை துவக்குவது இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் கண்கெடுக்கும் பணியாளர்களுக்கு முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட...

தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர்

ஷ்யாம் நீயூஸ் 12.12.2022 தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர். வரும் 18ஆம் தேதி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்த உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை இன்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் தூத்துக்குடி ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் கிளை மன்றங்கள் சார்பாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பழனிமுருகன், N. முருகன், ராமசாமி சிவசூரியன்,வள்ளிநாயகம், லிங்ககுமார், தனபால், காந்தி, ராஜ், கண்ணன், சந்தனம், மூர்த்தி, ரஜினி முருகன், ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பதட்டம்

ஷ்யாம் நீயூஸ் 12.12.2022  ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பதட்டம்! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டமைப்புகள் அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் தாசில்தார் காவல்துறைனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதால் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டம் நடத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணத்தை அறிவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இவ்வாறு பதட்டம் நடத்தும் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்  ஏஜென்சிகளை வைத்து பணம் கொடுத்து கூலிக்கு ஆட்களை அழைத்து  ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை...

புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

 ஷ்யாம் நீயூஸ் 10.12.2022 புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் வரவேற்புரையாற்றினார்.  தெற்குமாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.  சுகாதார விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, இணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ்,  முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான விபிஆர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், ஜோதிராஜா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம்,  தலைமை செயற்குழு ...

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு

ஷ்யாம் நீயூஸ் 10.12.2022  எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் அதிக அளவில் இளைஞர்கள் புதிய உறுப்பினர்கள் மகளிர்கள் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு...

தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் - கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார்

ஷ்யாம் நீயூஸ் 07.12.2022  தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் - கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமம் சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.  சிறப்பு மருத்துவ முகாமில்  போர்டிஸ் மருத்துவமனை இயக்குனர் வெங்கட பணிதர் நெல்லூரி வரவேற்புரையாற்றுகிறார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  மருத்துவ முகாமை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதார துறை துணை  இயக்குநர்கள் பொற்செல்வன், பாஸ்கோ ராஜா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மருத்துவர்கள் தொழ...

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது

ஷ்யாம் நீயூஸ் 05.12.2022 தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியாளர்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது தேர்விற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாகவும் வேலை வாய்ப்பு அலுவலகம் கடிதம் மூலமாகவும் 7958 விண்ணப்பங்கள் வரப்பட்டன இதில் 6029 நபர்கள் தேர்வு எழுதினர் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி தாலுகாவில் மூன்று தேர்வு மையங்களில் 1525 நபர்களில் 1133 நபர்கள் எழுத்து தேர்வு எழுதினர். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் ஆய்வு செய்தார் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15 16 தேதிகளில் நேர்காணல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு 19 12 22 அன்று நியமன ஆணை வழங்கப்படும் என வட்டாட்சியர்  தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு?

 ஷ்யாம் நீயூஸ் 01.12.2022 தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாயகிபுரம் கோரம்பள்ளம் சுற்று வட்டார 18 கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வரும் சுடலைமாட சுவாமி கோவில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடு சாலையில் அருகில் உள்ளது. இக்கோயில் இருக்கும் 52 சென்ட் இடம் தற்போது சந்தை மதிப்பில் 10கோடிக்கு மேல் உள்ளது என தெரிகிறது. சுடலைமாடசுவாமி கோயில் இருக்கும் கோரம்பள்ளம் சர்வே எண் 26/3B புதிய எண் 26/3B1A நிலம் 60 சென்ட் தனக்கு பாத்தியப்பட்டது என்று கோரம்பள்ளத்தைச் சார்ந்த G.K தேவராஜ் என்பவர் 1993 தூத்துக்குடி நீதிமன்றத்தில் விளிம்புகை வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம்  G.K.தேவராஜ் தாக்கல் செய்த விளிபுகை வழக்கை 11 2 1998ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தள்ளுபடி ஆனதை மறைத்து G.K தேவராஜ் அந்த நிலத்தை விற்பதற்கு முயற்சித்து வருவதாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது இதனால் அன்றைய பிரபல ந...

தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா நிறைவு நாள் விழா!கனிமொழி எம்.பி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

ஷ்யாம் நீயூஸ் 29.11.2022  தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா நிறைவு நாள் விழா!கனிமொழி எம்.பி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் 3வது புத்தகத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள கமலம் மகாலில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.எம்.பி. சமூக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் மாநகர ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட புத்தக திருவிழா 29 11 2022 நாளான இன்று நிறைவு விழா நடைபெற்றது. எட்டு நாள் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து பொதுமக்கள் கல்வி ஆர்வலர்கள்,மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன் அடைந்தனர். நிறைவு விழாவான இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பள்ளி மாணவ மாணவியர்கள் தொகுப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலை...

தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் 29.11.2022 தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் லெவிஞ்சிபுரம் முதல்தெரு இரண்டாவது தெரு பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும்  கழிவுநீர் கால்வாய் பணியினை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.    மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுரேஷ் பிரதிநிதிகள் ரஜினிமுருகன், முத்து, சதிஷ்குமார், முருகன், நடராஜன், மற்றும் அல்பட், மணி, உள்பட பலர் இருந்தனர்.

சாதிப்பதற்கு மனதில் உறுதி வேண்டும் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் மாணவர்களுக்கு அறிவுரை!

 ஷ்யாம் நீயூஸ் 28.11.2022 சாதிப்பதற்கு மனதில் உறுதி வேண்டும்  தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் மாணவர்களுக்கு அறிவுரை! தூத்துக்குடி சி .வா.பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்றம் விழாவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ மாநகராட்சி ஆணையாளர் சாரு ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு வானவில் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்கள் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி உரையாற்றினர்.  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி இந்த வானவில் மன்றம் திட்டமாகும். ஸ்டெம் (சயின்ஸ் டெக்னாலஜி இன்ஜினியரிங் அண்ட் மேத்தமேடிக்ஸ்) திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் இணைந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக வானவில் மன்றம் செயல்படும். வகுப்பறிவியல் அறிவியல் மற்றும் கண...

தூத்துக்குடி மாநகராட்சி புதிய வணிக வளாக கடைகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும். இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நியூஸ் 21.11.2022 தூத்துக்குடி மாநகராட்சி புதிய வணிக வளாக கடைகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும். இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் வணிக வளாகங்கள் எஸ்சி எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீடு சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் ஆணையர் சாருஸ்ரீயிடம் மனு வழங்கினார் அந்த மனுவில் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது இந்திய குடியரசு கட்சி(G) இதனை வரவேற்கிறது இச்செயலாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய வணிக வளாகங்கள் கட்டி வருவதால் தூத்துக்குடி ஷெட்யூல்ட் இன மக்களைச் சார்ந்தவர்களுக்கு 18 +1 சதவீத அடிப்படையில் கடைகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அவர்களும் வியாபார தொழிலில் முன்னேற்றம் அடைய வழி வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மாப்பிள்ளையூரணியில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

 ஷ்யாம் நியூஸ் 21.11.2022 மாப்பிள்ளையூரணியில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.      தூத்துக்குடி கிங்மேக்கர் தேவராஜ் சிலம்பாட்ட பயிற்சி பள்ளியின் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் சிலம்ப போட்டி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாரம்பரிய சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாணவ மாணவிகள் பங்கு பெற்ற ஒற்றைகம்பு தனிதிறமை இரட்டை கம்பு வேல்கம்பு  இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை உதவித்தொகை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் வழங்கினார்.      விழாவில் ஆசான் ஆதிலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இளைஞர் அணி கௌதம், ஆனந்த், கலை, பத்திரகாளியம்மன் கோவில் நாடார் நடுநில...

தூத்துக்குடியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

 SHYAM NEWS 20.11.2022 தூத்துக்குடியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.      மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் உற்சாகமான வரவேற்பு எல்லா இடத்திலும் கொடுத்தற்கு நன்றி தூத்துக்குடியில் எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுத்து வரவேற்கும் ஊராக உள்ளது. 2021 தேர்தலின் போது 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றேன். 51ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதால் தலைவர் அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்ட...

தனியார் ராக்கெட் விட்டுள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.தூத்துக்குடியில் இஸ்ரோ சிவன் பேட்டி!

ஷ்யாம் நியூஸ் 20.11.2022   தனியார் ராக்கெட் விட்டுள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.தூத்துக்குடியில் இஸ்ரோ சிவன் பேட்டி! விக்ரம் எஸ் ராக்கெட் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் ராக்கெட் விட்டுள்ளது ரொம்ப நல்ல காரியம்.  இது தொடக்கம் தான். மென் மேலும்  பெரிய ராக்கெட் ஏவபட உள்ளது . சந்தோசமாக இருக்கிறது. இதனால் பல புதிய நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கும, சாட்டிலைட் உருவாக்குவதற்கும்,  அப்ளிகேஷன் உருவாக்குவதற்கும் வருகின்றனர். சந்திராயன் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது என்று தெரிவித்தார். குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவு தளத்திற்கான நிலம் கையெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இனி ராக்கெட் ஏவுதளம் உருவாக்குவதற்கான பணிகள் தொடங்குவார்கள். முதலில் டிசைன் வேலை பார்த்து விட்டு, மண் பரிசோதனைக்கு பிறகு ராக்கெட் ஏவ...

புதுக்கோட்டையில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

ஷ்யாம் நியூஸ் 20.11.22  புதுக்கோட்டையில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு        தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர் வீடு வீடாக சென்று தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார்.     நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்...

தூத்துக்குடியில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில்லி

 ஷ்யாம் நியூஸ் 19.11.2022 தூத்துக்குடியில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி. தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில்லி அகடாமி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும் தேசிய அளவிலான இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில்லி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் தமிழகத்திலிருந்து தஞ்சாவூர் வேலூர் தூத்துக்குடி திருப்படிப்பூண்டி தென்காசி ராணிப்பேட்டை சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் .ஏழு அணிகளுடன் தமிழக அணி எதிர்த்து விளையாட உள்ளது. பயிற்சியாளர் துரைபாண்டியன் தலைமையில்  தமிழகத்திலிருந்து 16  வீரர்கள் கொண்ட அணி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது .கடந்தாண்டு தோல்வியை தழுவிய அந்த அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றுவோம் என்று முழு முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மாற்றுத்திற...

எனது தந்தை பெயரில் வரும் கல்வியாண்டில் விருது ஊக்கத்தொகை வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

 Shyam news 19.11.2022 எனது தந்தை பெயரில் வரும் கல்வியாண்டில் விருது ஊக்கத்தொகை வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார். தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு குழந்தைககள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.        நிகழ்ச்சி நிறைவில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கடந்த 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது இருப்பினும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றது. கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை போல் தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் பல உதவிகளை சமூகநலத்துறை மூலம் செய்து கொடுக்கப்படுகிறது. அத்துறையின் அமைச்சராக கீதாஜீவன் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பிற்கு தலைவராக செயல்படும் ரூபன் கிஷோர், பொறுப்புக்கு வந்த ...

உலக கழிப்பறை தினத்தையொட்டி மாப்பிள்ளையூரணி பஞ்., தலைவர் சரவணக்குமார் தலைமையில் உறுதிமொழி ஊர்வலம் நடைபெற்றது.

 ஷ்யாம் நியூஸ் 19.11.2022 உலக கழிப்பறை தினத்தையொட்டி மாப்பிள்ளையூரணி பஞ்., தலைவர் சரவணக்குமார் தலைமையில் உறுதிமொழி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி தூய்மை பாரத இயக்கம், ஊரகம், சுகாதார திட்டம் சார்பில் உலக கழிப்பறை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் எனது கிராமம் திறந்தவெளியில் மலம் கழித்தலமற்ற கிராமாக நிகழ்த்திட அனைத்து முயற்சிகளையும் செய்வேன். நான் எப்போதும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரிப்பேன். மக்கும் குப்பைகளை என் வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்துவேன். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலர்களிடம் கொடுப்பேன். தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாளுவேன். உறிஞ்சிகுழி அமைத்து எனது வீட்டிலும் தெருக்களிலும் கழிவு நீர் தேங்காமல் பாதுகாப்பாக அகற்றி நோய் பரவாமல் தடுப்பேன். நீர்நிலைகள் திட மற்றும் திரவ கழிவுகளால் மாசுபடாமல் பாதுகாப்பேன். ஓரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டேன். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பையை எடுத...

தூத்துக்குடியில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி இடம் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர்

ஷ்யாம் நியூஸ் 19.11.2022 தூத்துக்குடியில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி இடம் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கே கைலாசபுரம் கிராமத்தில் புளியம்பட்டி திருத்தல கத்தோலிக்க திருச்சபை சார்பாக rc தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் உள்ளூர் வெளியூர் மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் .தலைமை ஆசிரியராக அல்பர்ட் கென்னடி என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். கல்வி போதிக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நேராக மதிக்கப்படுவது மரபு ஆனால் ஆசிரியரே ஒழுக்ககேடான செயல்களை பல நாட்களாக மாணவிகள் மீது பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார் மாணவிகளின் அந்தரங்க பாகங்களை தொடுவது தவறான முறையில் பேசுவது என பல சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து வந்தது தெரிய வருகிறது. இது வேதனை தரும் செயல் மாணவிகள் பல நாட்களாக ஆசிரியரின் மிரட்டலான வார்த்தைகளுக்கு பயந்து வீட்டில் சொல்லாமல் மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளனர் இதற்கு முன்னும் பல குற்றங்களை செய்து தந்த இந்த ஆசிரியர் மீது பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத புளியம்பட்டி கத்தோலி ...

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பொருட்களால் இறகு பந்து மைதானம் கட்டுப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் பணிகளை தடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

 ஷ்யாம் நியூஸ் 19.11.2022 தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பொருட்களால் இறகு பந்து மைதானம் கட்டுப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் பணிகளை தடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. தூத்துக்குடியில் உள்ள அசோக் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக இறகு பந்து மைதானம் கட்டப்பட்டு வருகிறது.இதில்  இறகு பந்து விளையாடுவதற்கு தளம் மரப்பலகையால் அமைக்கப்பட்டு வருகிறது இந்த மரப்பலகை தரமற்ற மரப்பலகை ஆகும் பெவிகால் போட்டு ஓட்டுவதால் இறகு பந்து விளையாடும் போது தளம் உடைந்து விடும் என  இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் இறகு பந்து வீரர்கள் புதியதாக அமைக்கப்படும் இறகு பத்து மைதானத்தில் பணியை தடுத்து நிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுபோன்று தூத்துக்குடியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்...

வாக்குச்சாவடி முகவர் பட்டியல் தாசில்தாரிடம் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா வழங்கினார்.

ஷ்யாம் நியூஸ் 13.11.202  வாக்குச்சாவடி முகவர் பட்டியல் தாசில்தாரிடம் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா வழங்கினார்.   ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி திமுக முகவர்களுக்கான பட்டியலை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பரிந்துரை கடிதத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும் தாசில்தாருமான நிஷாந்தினியிடம் சண்முகையா எம்.எல்.ஏ, வழங்கினார்.  ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு சரவணக்குமார், ஓட்டப்பிடாரம் இளையராஜா, தூத்துக்குடி வடக்கு சுப்பிரமணியன், மத்திய ஒன்றியம் ஜெயக்கொடி, கருங்குளம் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து மற்றும் கௌதம் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி ஆதி திராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தர வேண்டி கலெக்டர் செந்தில்ராஜுடம் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 12.11.2022 தூத்துக்குடி ஆதி திராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இடத்தில்  வீடு கட்டித்தர வேண்டி கலெக்டர் செந்தில்ராஜுடம் இந்திய குடியரசு கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன்  மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜுடம் நேற்று  (11 /11 /2022) தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணியில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட சிவகாமி IAS நகரில்  வீடு கட்டித் தரக் கோரி மனு கொடுத்தார். அந்த மனுவில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் எந்தவித அடிப்படை வசதி இல்லாமலும் மக்கள் சுயமாக குடியேற முயற்சித்தால் சமூக விரோதிகளால் பயமுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் அல்லல்பட்டு வருகின்றனர் ஆகவே பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அல்லது தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீடு கட்டும் திட்டத்தில் சிவகாமி ஐஏஎஸ் நகரில் பட்டா உள்ள அனைவருக்கும் இலவச வீடு கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தனியார் டவர் அமைக்க பொதுமக்கள் சிலுவைப்பட்டியில் போராட்டம் சண்முகையா எம்.எல்.ஏ பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ்

 ஷ்யாம் நியூஸ் 11.11.2022 தனியார் டவர் அமைக்க பொதுமக்கள் சிலுவைப்பட்டியில் போராட்டம் சண்முகையா எம்.எல்.ஏ பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ்   தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1.50 லட்சம் பொதுமக்கள் 58 கிராமங்களோடு வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் புதிய கட்டுமான பணிகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு அரசின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். என்ற விதிமுறை இருந்து வருகிறது. அதிக ஜனத்தொகை கொண்ட ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் சிலுவைப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக செல்போன் டவர் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்க பணியை ஆரம்பித்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை கைவிட்ட நிறுவனம் வியாழன் அன்று இரவு மீண்டும் அப்பணியை துவக்கி கம்பிகட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தி தொடர் போராட்டமாக நடைபெற்ற நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் இதுகுறித்த...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்

 ஷ்யாம் நியூஸ் 11.11.2022 தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்    தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில்  பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர் மேயர் கண்காணித்து வருகின்றனர். 50வது வார்டு என்ஜிஓ காலணி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதிசபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை யடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்ச...