முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்!

 ஷ்யாம் நீயூஸ்

19.12.2022

பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்!


தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை  .இங்கு 2003 2005 ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏ ராஜம்மாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம்  கட்டித் தரப்பட்டது .அந்த சமுதாய கூடம் கட்டி 20 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு பஞ்சாயத்தால் கட்டிடத்தை இடிக்க  தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.  சமுதாய கூடத்தை இடிப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்படாத நிலையில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபாவின் கணவர்அதிசயராஜ் கட்டிடத்தை இடித்து  பல லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தில் உள்ள இரும்பு கதவுகள் ஜன்னல்கள் டி எம் டி கம்பிகள் போன்றவற்றை தன்னிச்சையாக எடுத்து விற்று விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜனிடம் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் அதிசயராஜ் சமுதாயக்கூட கட்டிட கம்பிகளை எடுத்து விற்று விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இது குறித்து தாங்களின் நிலைபாடு என்ன என்று கேட்டபொது பொதுமக்கள் அவன் அப்படித்தான் இருப்பான் என்று  கிராம மக்களை ஒருமையில் பேசியதோடு கட்டிடத்தை இடிப்பதற்கு எந்த அரசு விதிமுறையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டிய அவசியம் இல்லை கம்பிகளை விற்பனை செய்ததை கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். இதிலிருந்து அரசு விதிமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும்  பி டி ஓ தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவரோடு கட்டிடத்தின் கம்பிகளை விற்று பங்கு போட்டு ஊழல் செய்துள்ளனர் என்பது தெரிகிறது. இதுகுறித்து காலான்கரை பொதுமக்களிடம் கேட்டபோது  மக்களை கிள்ளு கீரையாக நினைத்து ஒருமையில் பேசிய  ராம்ராஜை  சட்டபடி தண்டிக்கப்பட வேண்டும். இடிக்கப்பட்ட கட்டிடத்தில் உள்ள கம்பிகளின் விலை மதிப்பு எவ்வளவு என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாமல் அரசு பணத்தை கணக்கு காட்டாமல் பி டி ஓ ராமராஜ் மற்றும் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா தனது கணவர் அதிசயராஜ் மூலம் லட்சக்கணக்கான மதிப்புள்ள கம்பிகளை விற்று பணத்தை இருவரும் ஏப்பம் விட்டு அரசை ஏமாற்றியுள்ளனர் . கூட்டுக்  கொள்ளையில் ஈடுபட்ட இருவர் மீதும் மாவட்ட நிர்வாகம்  வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மற்றும் தற்போதைய பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் கடந்த பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்தபோது பஞ்சாயத்திற்க்கு மின்விளக்கு மற்றும்  பொருட்கள் அதிக விலைக்கு வாங்கியதாக ஊழல் குற்றம் சாட்டப்பட்டும் மற்றும் அரசு பணத்தை விரையம்  செய்ததாகவும் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். காலான்கரை கிராமம் முழுவதும் தெருக்கள் முழுவதும் சாக்கடையாக உள்ளது .சுகாதாரம் போன்ற துப்புரவு பணிகளை ஒழுங்காக செய்வதில்லை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.  கோரம்பள்ளம் பஞ்சாயத்து முழுவதுமே சுகாதாரம் சீர்கேட்ட நிலையில் உள்ளதால் இங்கு நோயாளிகள் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். சுதந்திர காலத்தில் இருந்து இன்று வரை காலாங்கரை கிராமத்திற்கு வரவேண்டிய சுகாதாரமான குடிநீரை இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தை தனது வீடாக பயன்படுத்தி தனது கணவர் பணியாளர்களுக்கு கட்டளையிடுவதும் தனது மகன் தீர்வை முதலியன போன்ற பணி செய்வதற்கும் அமர்த்தியுள்ளார் .அங்கு பணிபுரியும் பஞ்சாயத்து செயலர் டம்மியாக அமர்த்தப்பட்டு அவருக்கு எந்த விவரமும் தெரிவிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்களிடம் அவர் சரியான தகவலை கூற முடியாத நிலையில் உள்ளார். பஞ்சாயத்து நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய பிடிஓ பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கோரம்பள்ளம் பஞ்சாயத்து பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...