முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு

ஷ்யாம் நீயூஸ்

10.12.2022

 எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு

   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் அதிக அளவில் இளைஞர்கள் புதிய உறுப்பினர்கள் மகளிர்கள் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திமுக கழகம் தொடங்க காரணமாக இருந்த ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகவும் பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பராகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த அண்ணனாகவும் விளங்கியவர் இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் சுயமரியாதை கொள்கைகளை எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்து கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியில் ஒருவராக விளங்கியவர் தன்னுடைய இறுதி காலம் வரை கழகத்திற்கு எத்தனை சோதனை வந்த நேரத்திலும் தடம் மாறாமல் கலைஞருடன் பயணித்தவர். கழகம் ஆட்சி பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் அமைச்சராக பொறுப்பேற்று திறமையாக செயல்பட்டவரும் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த இனமான போராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள் வருகிற டிசம்பர் 19அன்று வருகிறது. அன்றைய தினத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடி வேண்டும். என்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி பேருர் மற்றும் வார்டு கிளைக்கழகங்கள் தோறும் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்திட அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தலைமை கழகம் அறிவிப்புக்கிணங்க தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரபடுத்தி தலைமை கழகம் அறிவித்தப்படி அப்பகுதியை நன்கு அறிந்திருந்தவர்கள் கழப்பணியாற்றுபவர்களாகவும் இருந்திட வேண்டும். என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க இளைஞர் அணி மகளிர் அணி தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளடக்கியவர்களை நியமிப்பது மாநகரம் ஒன்றிய பகுதி நகர பேரூர் செயலாளர்கள் சுணக்கம் காட்டாமல் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து அந்த பட்டியலை மாவட்ட கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் 100 தெரு முனை கூட்டங்கள் நடத்துவது பேச்சாளர் விபரம் பின்னா தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, தலைமை கழக பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணிஅமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர்கள் ஞானகுருசாமி, தங்கமாரியம்மாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின் அருண்சுந்தர், பகுதி இளைஞர் அணி ரவி, மற்றும் கருணா, அல்பட், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...