முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ்

23.12.2022

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சி சார்ந்த கிராமம் காலான்கரை. தனி கிராம்மாக பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வருகிறார் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயகுமார். .இக்கிராமத்திற்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் குழாய் பதிக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்திய பஞ்சாயத்து தலைவர் இதுவரை குடிநீர் வழங்காமல் குளத்து நீரையும் உப்பு நீரையும் கலந்து கொடுத்து வருகிறார் இதனால் அக்கிராம மக்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றன .அதே கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில  கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறார். தனி பட்டியலின மக்கள் வாழ்ந்துவரும் காலான்கரை மக்களுக்கு இதுவரை அரசால் வழங்கப்பட்ட சுத்தமான தாமிரபரணி கூட்டு குடிநீரை வழங்கப்படாமல் இழுத்து அடித்து வருகிறார். மற்றும் இக்கிராமத்திற்க்கு 2004 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக சுமார் 30 லட்சம் மதிப்பில் அப்போதைய அதிமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜம்மாள் சட்டமன்ற நிதியில் இருந்து சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் . இந்த சமுதாய கூடத்தில் தான் கிராமத்தில் உள்ள பலரது திருமணங்கள் நடைபெற்று உள்ளது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சமுதாய நலக்கூடத்தை கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பிடிஓ ராமராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் கட்டிடத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் அதனுள் பயன்பாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் டிஎம்டி கம்பிகள் மற்றும் கட்டித்தை இடித்த மணல் செங்கற்கள் உட்பட  பல லட்சங்களுக்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை விற்று பஞ்சாயத்து தலைவர் கணவர் அதிசயராஜ் மூலம் கையாடல் செய்துள்ளனர் . கட்டிடத்தில் உள்ள பொருட்களை விற்று அரசுக்கு சேர்க்க வேண்டிய பணத்தை டெண்டர்  ஏதும் விடாமல் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமலும் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜனை தொடர்பு கொண்ட போது கட்டிடத்தை அடிப்பதற்கு டெண்டர் விட வேண்டிய அவசியம் இல்லை கட்டிடத்தில் இருந்த பொருட்களை விற்பனை செய்த பணத்தை அரசுக்கு கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். இது சாத்தியமா என விசாரித்த போது அரசு கட்டிடத்தை இடிக்கும் போது முறையாக டெண்டர் விடுவதும் அதில் வரும் பணத்தை அரசு கணக்கில் செலுத்தி வரவு வைப்பதும் அலுவலர்களின் பொறுப்பு இவ்வாறு தன்னிச்சையாக செயல்படுவது தவறு என்றும்  தெரிவிக்கின்றனர். மற்றும் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ்  தனது கணவர் அதிசயராஜுடன் சேர்ந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் தங்களுக்கு குறிப்பிட்ட வாக்குகள் வேண்டும் என்பதற்காக காலான்கரை கிராமத்தில் உள்ள பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் போது குறிப்பிட்ட நபர்களுக்கு அரசு இடத்தை தானம் செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றுசுவர் கட்டியுள்ளார் இவர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்  மற்றும் அதிகாரிகள் அரசு இடங்களை பாதுகாப்பதற்கு பதிலாக  தன் சுயநலத்துக்காக செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது சரியான காரணம் சொல்ல மறுத்து வருகிறார் பஞ்சாயத்து தலைவர். இந்த தகவல் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் பஞ்சாயத்து தலைவருடன் தவறான போக்குக்கு ஆதரவளித்து வருகின்றனர். தமிழக முதல்வர்  குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வதற்கும் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவதோடு அவர்களின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு வரும் இந்த வேலையில் பள்ளிக்குச் சொந்தமான அரசு இடத்தை தனியாருக்கு ஓட்டுக்காக தாரை வார்த்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காலான்கரை கிராமத்தில் இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை விற்ற பணத்தை அரசு நிதியில் சேர்த்தார்களா என்பதை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் அரசு நிதியில் சேர்க்கப்படாத பட்சத்தில்  வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் கோரபள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜ் ஆகியோர் மீது சட்டரீத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர் . காலான்கரை கிராமத்தில் இருந்த சமுதாய நலக்கூடம் கட்டிடத்தை யாரும் இடிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் இருந்த சமுதாய நலக்கூடத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...