முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு?

 ஷ்யாம் நீயூஸ்

01.12.2022

தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!


தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாயகிபுரம் கோரம்பள்ளம் சுற்று வட்டார 18 கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வரும் சுடலைமாட சுவாமி கோவில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடு சாலையில் அருகில் உள்ளது. இக்கோயில் இருக்கும் 52 சென்ட் இடம் தற்போது சந்தை மதிப்பில் 10கோடிக்கு மேல் உள்ளது என தெரிகிறது.

சுடலைமாடசுவாமி கோயில் இருக்கும் கோரம்பள்ளம் சர்வே எண் 26/3B புதிய எண் 26/3B1A நிலம் 60 சென்ட் தனக்கு பாத்தியப்பட்டது என்று கோரம்பள்ளத்தைச் சார்ந்த G.K தேவராஜ் என்பவர் 1993 தூத்துக்குடி நீதிமன்றத்தில் விளிம்புகை வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம்  G.K.தேவராஜ் தாக்கல் செய்த விளிபுகை வழக்கை 11 2 1998ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தள்ளுபடி ஆனதை மறைத்து G.K தேவராஜ் அந்த நிலத்தை விற்பதற்கு முயற்சித்து வருவதாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது இதனால் அன்றைய பிரபல நாளிதழான கதிரவனில் 22.4.1999 ல் தங்கள் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த பொது அறிவிப்பில் மேற்படி நிலத்தை G.K தேவராஜ்   விற்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்த நிலத்தை யாரேனும் கிரயம் செய்ய வேண்டாம் எனவும் மீறி வாங்கினால் வாங்கினவருக்கு அந்த நிலம் சட்டபடி செல்லாது என்றும் அந்த பொது அறிவிப்பு விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.  8 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்க்காக நெடுஞ்சாலைதுறை எடுத்துகொண்டது.இந்நிலையில் தேவராஜ் இறந்து விடவே அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி நீதிமன்றம் தேவராஜ் விளிம்புகை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை மறைத்து காலம் சென்ற G.K தேவதராஜுன் மனைவி மற்றும் வாரிசுதாரர்கள் 2008ல் சென்னையை சார்ந்த சாம் தேவதாஸ் என்கிற நபருக்கு பவர் பத்திரம் கொடுத்துள்ளனர். சாம் தேவதாஸ் தனக்கு கொடுக்கப்பட்ட பவர் பத்திரத்தை 2012ல் தானே கிரைய பத்திரமாக மாற்றி உள்ளார் என்றும் பெரியநாயகபுரம் மற்றும்  சுடலைமாடசாமி கோவிலை தரிசித்து வரும் 18 கிராம பட்டியலின பொதுமக்கள்  கூறுகின்றனர். நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை மீறி எப்படி மீண்டும் பவர் பத்திரம் பதியப்பட்டது மீண்டும் அந்த நபருக்கு பத்திரப்பதிவு எப்படி நடைபெற்றது என்ற கேள்வியும் எழுப்புகின்றனர். 2012ல் கிரைய பத்திரம் பதிவு செய்த சாம் தேவதாஸ் பத்திரப்பதிவை வைத்து தீர்வை முதலானவற்றை செலுத்துகிறார் பின்பு இந்த இடம் தனக்கு சொந்தம் கூறவே மீண்டும் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது அதனைத் தொடர்ந்து 2019-ல் ஆர்டிஓ விசாரணை நடத்தியுள்ளார்  இதில் இந்த இடத்தில் பிரச்சனை இருக்கும் என்றால் இரு தரப்பினரையும் சிவில் நீதிமன்றத்தை அணுக சொல்லி முடித்துள்ளதாக கூறுகின்றனர்.    இரு தரப்பினருக்கும் பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில்  நிலத்தை அளந்து தர தூத்துக்குடி வட்டாட்சியருக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணையை பெறுகிறார் சாம் தேவதாஸ். இதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் நில அளவையார்கள் வந்து நிலத்தை அளக்க முயற்சித்தனர் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புக்கு உள்ளானது கோயில் இருக்கும் வளாகத்திற்குள் கிராம மக்களை உள்ளே செல்ல அனுமதி அளிக்காதால் தூத்துக்குடி ஏ எஸ் பி சதீஷை எதிர்த்து பெரியநாயகிபுரத்த சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார் அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . நிலத்தை அளப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அப்பகுதியில் பெரும் கூட்டம் திரண்டது இரு தரப்பினரிடையும் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் சமரசம் பேசி அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தினார். நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்பது நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது அதனை செயல்படுத்த தங்களை அனுமதிக்குமாறு கிராம மக்களிடம் கூறினார் அதனைத் தொடர்ந்து நிலம் அளக்கப்பட்டது மேற்படி தங்களுக்குள் உள்ள நிலப் பிரச்சினைகளை  இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடலாம் என்ற அறிவுரையும் வழங்கினார் இதனைத் தொடர்ந்து கூட்டம் கலையத் தொடங்கியது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...