முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

ஷ்யாம் நீயூஸ்

12.12.2022

 மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

தூத்துக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ஊராட்;சி மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணியை துவக்குவது இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் கண்கெடுக்கும் பணியாளர்களுக்கு முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 ஊராட்சிகளில் மாப்பிள்ளையூரணி சிறந்த ஊராட்சியாக விளங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அரசின் சார்பில் அறிவிக்கப்படுகின்ற திட்டங்களை முழுமையாக நமது பகுதியில் உள்ள மக்களுக்கு சென்றடையும் வகையில் அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வரும் வேலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்று விளங்கும் வகையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கிணங்க முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், தங்கபாண்டி, ராணி, சக்திவேல், ஸ்டாலின், பாலம்மாள், வசந்தகுமாரி, உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, பாண்டியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன், மற்றும் ஆரோக்கிய மேரி, தர்மலிங்கம், ஆனந்தகுமார், ராமசந்திரன், கௌதம், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...