முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.

 ஷ்யாம் நீயூஸ்

31.12.2022

குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர். 

குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கில் அங்கு குளித்து கொண்டிருந்த குழந்தையை வெள்ளநீர் இழுத்துச்  சென்றது. ஆபத்தில் சிக்கி குழந்தையை தன் உயிர் பாராமல் மின்னல் வேகத்தில் காப்பாற்றி தூத்துக்குடி இளஞ்சரை தூத்துக்குடி ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 29 12 2022 அன்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு தனது காரில் குற்றாலம் சென்றுள்ளார். பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குளித்துக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை வெள்ளநீர் இழுத்துச் சென்றுள்ளது பொதுமக்கள் குழந்தை குழந்தை என கத்தவே சத்தம் கேட்டு அங்கு சென்ற விஜயகுமார் குழந்தை ஆபத்தில் சிக்கி உள்ளதை கண்டு தன்னுயிர் பாராமல் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை மின்னல் வேகத்தில் காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாருக்கு அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் பாராட்டினர். குழந்தை காப்பாற்றிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அந்த இளைஞரை அழைத்து பாராட்டி பெருமை சேர்த்தார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் அந்த இளைஞரை தனது அலுவலகத்தில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியதோடு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார் மற்றும் அவருக்கு  தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார் தன்னுயிர் பாராமல் குழந்தையைகாப்பாற்றிய  இளைஞரை வாழ்த்தி பாராட்டியதோடு குழந்தையை காப்பாற்றி தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...