முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் டவர் அமைக்க பொதுமக்கள் சிலுவைப்பட்டியில் போராட்டம் சண்முகையா எம்.எல்.ஏ பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ்

 ஷ்யாம் நியூஸ்

11.11.2022

தனியார் டவர் அமைக்க பொதுமக்கள் சிலுவைப்பட்டியில் போராட்டம் சண்முகையா எம்.எல்.ஏ பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ்

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1.50 லட்சம் பொதுமக்கள் 58 கிராமங்களோடு வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் புதிய கட்டுமான பணிகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு அரசின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். என்ற விதிமுறை இருந்து வருகிறது. அதிக ஜனத்தொகை கொண்ட ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் சிலுவைப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக செல்போன் டவர் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்க பணியை ஆரம்பித்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை கைவிட்ட நிறுவனம் வியாழன் அன்று இரவு மீண்டும் அப்பணியை துவக்கி கம்பிகட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தி தொடர் போராட்டமாக நடைபெற்ற நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் இதுகுறித்த தகவல்களை தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் நடத்திய சம்பவ இடத்திற்கு வந்து சண்முகையா எம்.எல்.ஏ புதிதாக டவர் அமைக்கும் பகுதியை பார்வையிட்டு அதன் சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் இந்த பகுதியில் டவர் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். வேறு காட்;டு பகுதியில் அமைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் கைவிடுவதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் சண்முகையா எம்.எல்.ஏ கூறுகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற அரசு மக்களுக்கான அரசாகும் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த பகுதியை சேர்ந்து பொதுநல அமைப்புகள் மகளிர் சுயஉதவிகுழுக்கள் என ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதனடிப்படையில் இந்த புதிய டவர் அமைக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் கைவிடுவதாக கூறியுள்ளது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலளர் சரவணக்குமார், சிபிஎம்; ஒன்றிய செயலாளர் சங்கரன், வக்கீல் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்;பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், தங்கபாண்டி, பாலம்மாள்,

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன்,

தாளமுத்துநகர் சப் இன்ஸ்பெக்டர்கள் சதிஸ்குமார், முனியசாமி, சமூக ஆர்வலர் சசி, வின்சென்ட், ஜெகதீஸ்வரன், மைக்கேல், வக்கீல் பால்துரை, அனிஸ்மெல்வின். மற்றும் கௌதம், உள்பட பலர் உடனிருந்தனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...