முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லையில் மூன்று தொழிலாளர்களின் சாவு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்.-காயல் அப்பாஸ் வேண்டுகோள்!

தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் தூத்துக்குடி 29.செப்.2018 மண் சரிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் சுப்பரமணியன் விட்டில் கிணறு தோண்டும் போது மண் சரிந்து. மதி, சோனாலம், சுடலை, ஆகிய முவரும் பலியாகினர்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . பாதுகாப்பு அல்லாத கிணறை சுத்தம் செய்ய சொன்ன விட்டின் உரிமையாளர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கிட வேண்டும் மெனவும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. பலியான / மதி, சோனாலம், சுடலை, ஆகியோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .

திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல': உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU) 27 செப்டம்பர் 2018 'திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல': உச்சநீதிமன்றம் தீர்ப்பு படத்தின் காப்புரிமை GETTY IMAGES திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது. படத்தின் காப்புரிமை GETTY IMAGES இதுபோன்ற உறவுகளில் ஈடுப்பட்டால் ஆண் பெண் ஆகிய இருவருமே குற்றம் செய்திருந்தாலும் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்ற அம்சத்தில் அடிப்படையில் குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 497-ஐ எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் என்ற வெளிநாடுவாழ் இந்தியர் 2017 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 497க்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீ...

இந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா?

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU) 26 SEP 2018  ஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா!   இந்திய விவசாயிகளின் அவலக் குரலை, நிர்வாண நிலையை, ஆதரவற்ற அறுவடைகளை இந்திய அரசு கேட்டதோ இல்லையோ, ஜப்பான் அரசு கேட்டிருக்கிறது. விளைவு இந்தியாவின் புல்லட ரயில் திட்டத்துக்கு வழங்கி வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. புல்லட் ரயில் திட்டம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் இருந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை வரையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் வரும் ஆகஸ்ட் 2022-ல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், ஜப்பானில் இருந்து நிதி உதவி வரும் தவனைகளைக் கணக்கில் கொண்டு 2022க்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்த பட்ஜெட் இந்த 508 கிலோமீட்டர் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று Natioanal High Speed Rail Corporation Limited (NHSRCL) என்கிற இந்திய அரசு அமைப்பு கணக்கிட்டுச் சொன்னது. இந்த NHSRCL இந்தியாவில் புட்டல் ரயில் த...

ஆதார் சட்டம் செல்லும் - வங்கி, அலைப்பேசி எண்ணுடன் இணைப்பது சட்டவிரோதம் என தீர்ப்பு

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU) 26 செப்டம்பர் 2018 ஆதார் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது இருப்பினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் ஆதார் செல்லும் என உச்சநீதிம்னறம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆதார் அட்டை பாதுகாப்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் அது விளிம்பு நிலை மக்களுக்கு பயனளிக்கக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை பாதுகாக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. "ஆதார் விளிம்பு நிலை மக்களுக்கு மரியாதையை வழங்குகிறது. தனியுரிமையைக்காட்டிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை பெரிசு."என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு ஆதார் அடையாள அட்டை தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை எதிர்...

குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்!

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU) 26 செப்டம்பர் 2018 இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations Inter-agency Group for Child Mortality Estimation) வெளியிட்டுள்ள அறிக்கை. உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப் ) மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய இந்தக் குழுவின் அறிக்கையில் குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், உலகெங்கும் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2016இல் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 8,67,000. கடைசி ஐந்து ஆண்டுகளிலேயே 2017இல்தான் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனினும் அந்த அறிக்கையின் தரவுகளைப் பகுத்தாய்ந்தால், (ஓர் ஆண்டுக்கு உள்ள 3,15,36,000 வினாடிகளை 8,02,000ஆல் வகுத்தால்) 2017இல் சுமார் 39.3 வினாடிக்கு ஒருமுறை ஒரு வயதுக்கும் குறைவான ஓர் இந...

முக்கிய இந்திய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU) 26 செப்டம்பர் 2018 ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன?  'ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர்  22ஆம் தேதி  நடந்தது என்ன?' படத்தின் காப்புரிமை GETTY IMAGES போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன? என்ற மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார்  "ஆணையத்தில் நான் ஏற்கனவே அளித்த சாட்சியத்தின் தொடர்ச்சியாக சில சந்தேகங்களை எழுப்பினேன். போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்தார் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கிறது. போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது யார்? ஆம்புலன்சுக்கு போன் செய்தது யார்? என்ற மர்மம் நீங்கவில்லை. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்த போது, வீட்டின் உள்ளே சசிகலாவுடன் 2 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அந்த பணிப்பெண்கள் எங்கே? அவர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் யாரையும் ...

ஸ்டெர்லைட்க்கு எதிராக தூத்துக்குடி மாணவி சோஃபியா எழதிய கட்டுரை!

தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் (அம்மா அரசு) 25 செப்டம்பர் 2018       செய்தி அரசியல் கருத்தாடல் சமூகம் வீடியோ களம் புதிய ஜனநாயகம் இதர மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் தலைப்புச் செய்தி வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.  - September 6, 2018 ‘பா சிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்டதற்காக, கைது செய்யப்பட்டவரும் ஆய்வு மாணவருமான லூயி  சோபியா  ‘‘த வயர்” இணையதளத்தில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் 46-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பிரச்சினை என்பதை விளக்கமான கட்டுரையாக ஆதாரங்களுடன் எழு...