முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பரிசுகள் வழங்கினார்

 ஷ்யாம் நீயூஸ் 27.02.2023 சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பரிசுகள் வழங்கினார் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற தலைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்.இ.ஆ.ப., வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.02.2023) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புனார்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ் 27.02.2023 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப.,தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப. தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.02.2023) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 410 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப.,  அறிவுறுத்தினார் ஆட்சித்தலைவர். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு ...

தென் மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை அமைக்க வேண்டும்: காயல் அப்பாஸ் அரசுக்கு கோரிக்கை !*

ஷ்யாம் நீயூஸ் 26.02.2023  தென் மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை அமைக்க  வேண்டும்: காயல் அப்பாஸ் அரசுக்கு கோரிக்கை ! தென் மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசங்களை ஒழிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு சோரீஸ் புரத்தை சேர்ந்த முத்துக்குமார்,  தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்த வந்த நிலையில் சமூக விரோதி கும்பலால் படு கொலை செய்ய பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. மேலும் முத்துக் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.      கடந்த ஆண்டுக்கு முன்னால் பழிக்கு பழி வாங்கும் செயலாக தொடர்ந்து படு கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததால் பொது மக்கள் அச்சத்தோடு வாழ்கிற சூழ்நிலை ஏற்ப்பட்டன. ஆனால் இப்போது பழிக்கு பழி என்கிற படு கொலை சம்...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 25.02.2023 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இன்று (25.02.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது  மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி சிவில் உரிமைகள் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர்  சேவியர், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர்  ரா...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தூத்துக்குடி அதிமுகவினர் தீவிர ஓட்டு வேட்டை.

ஷ்யாம் நீயூஸ் 25.02.2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தூத்துக்குடி அதிமுகவினர் தீவிர ஓட்டு வேட்டை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நேற்று நடைபெற்ற இறுதிகட்ட பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மந்திர மூர்த்தி, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், 39 வட்ட கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம்,மேற்கு பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வட்டக்கழக செயலாளருமான மணிகண்டண் மற்றும் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர்அணி இணைச்செயலாளர் டைகர் சிவா,ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.சார் ஆட்சியர் கெளரவ் குமார் கலந்துகொண்டார்.

 ஷ்யாம் நீயூஸ் 25.02.2023 தூத்துக்குடியில்  மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.சார் ஆட்சியர் கெளரவ் குமார் கலந்துகொண்டார். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறயுடன் இணைந்து விடுதி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்படும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி தூத்துக்குடி வ உ சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சார் ஆட்சியர் கெளரவ் குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றினார் மாணவர்கள் உயர்கல்வி படிப்பினை தான் விரும்பிய கல்வியை பயில வேண்டும் மற்றும் அதற்க்கான முயற்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.மற்றும் விடுதி மாணவ மாணவிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அ.ஸ்வர்ணலதா, உதவி இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ம.பேச்சியம்மாள் மற்றும் பிற்படுத்தப்பட்ட ,சிறுபான்மை நல அலுவலர்கள் மற்றும் விடுதி வார்டன்கள் பலர் கலந்துகொண்டார்.

தூத்துக்குடியில் பிட்காயின் மோசடி மேலும் ஒருவர் கைது

ஷ்யாம் நீயூஸ் 24.02.2023 தூத்துக்குடியில் பிட்காயின் மோசடி மேலும் ஒருவர் கைது. தூத்துக்குடியில் முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது - ஒரு ஐ போன் பறிமுதல்   எதிரியை கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ...

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியின் 85வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

ஷ்யாம் நீயூஸ் 24.02.2023  தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியின் 85வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியினு 85 வது ஆண்டை முன்னிட்டு மாணவ,மாணவிகளின் கண்கவர்  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிபடுத்தினர்.அதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில்  சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி  உற்சாகபடுத்தினர்.

75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஷ்யாம் நீயூஸ் 24.02.2023 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்   ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  தமிழக முழுவதும் மறைந்த   முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை விழாவை  அதிமுக தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர் அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தின்படி தூத்துக்குடி டூவீபுரம் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா,பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார்முத்து, பகுதி துணைச்செயலாளர் கணேசன...

ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கருணை இல்லம் குழந்தைகளுக்கு எம்.ஜி ஆர் இளஞ்சரணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.

ஷ்யாம் நீயூஸ் 24.02.2023 ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கருணை இல்லம் குழந்தைகளுக்கு  எம்.ஜி ஆர் இளஞ்சரணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.  தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி  சண்முகநாதன் வழிகாட்டுதலின்படி மத்திய வடக்கு பகுதி  எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், 39வது வட்ட கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் கருணை இல்லத்தில்  மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் டைகர்சிவா, பகுதி கழக துணைச்செயலாளர் கணேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி எஸ் பி பாலாஜி சரவணனுக்கு DGP சைலேந்திரபாபு பாராட்டு!

 ஷ்யாம் நீயூஸ் 24.02.2023 தூத்துக்குடி எஸ் பி பாலாஜி சரவணனுக்கு DGP சைலேந்திரபாபு பாராட்டு! ஈமு மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர்  பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோடு பெருந்துறை, குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகைதிரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. இது சம்பந்தமாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ.5,65,83,840/- மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ.26,58,32,570/- ஏமாற்றப்பட்டதற்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவழக்குகளிலும் 18.02.2023 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேற்படி தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் எதிரிகள் மயில்சாமி மற்றும் சக்திவேல்...

விபத்தில் சிக்கியவர்களை தன் காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார் அமைச்சர் மா.சு

 ஷ்யாம் நீயூஸ் 17.02.2023 விபத்தில் சிக்கியவர்களை தன் காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார் அமைச்சர் மா.சு விபத்தில் சிக்கியவர்களை தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் . சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விகடன் விருது நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் விபத்துக்குள்ளாகி உதவிக்கு காத்திருந்த இருவரை  அந்த வழிக வந்த அமைச்சர் மா.சு தன் காரில் அழைத்து சென்று  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தார். விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றினர் . சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.

தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி உடன்குடியில் நடைபெற இருக்கிறது

 ஷ்யாம் நீயூஸ் 16.02.2023 தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி உடன்குடியில் நடைபெற இருக்கிறது மத்திய அரசின் நிறுவனமான மத்திய பனவெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் நிறுவனம் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் விக்டரி தொழில் முனைவோர் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது இந்த பயிற்சி இந்த மாதம் 27 2.2023 முதல் 03.032023 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் பவித்ரா ரெடிமேட் கார்மெண்ட்ஸ் சென்டரில் வைத்து நடைபெற இருக்கிறது இதில் 20 வகையான உணவு பதப்படுத்துதல் பயிற்சி நேரடியாக செய்து காட்டப்படும் இந்த பயிற்சியில் சாம்பார் பொடி ரசப்பொடி குழம்பு மிளகாய் பொடி மட்டன் பொடி, சிக்கன் பொடி பிரியாணி பொடி, வத்தல் குழம்பு மீன் மசாலா கரம் மசாலா செம்பருத்தி ஜூஸ் பூண்டு ஊறுகாய் உடன்குடி ரோஸ் மில்க் ,உடனடி  சாக்லேட் மில்க், க்ரேப் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ரோஸ்மில்க் சிரப், சாக்லேட் மில்க் சிரப், நன்னாரி சர்பத் ,கிரேப் குவாஸ் பாதாம் மில்க், போன்றவைகள் சொல்...

தூத்துக்குடியில் 6 வட்டாட்சியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி எஸ் பி யிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார்.

ஷ்யாம் நீயூஸ் 15.02.2023 தூத்துக்குடியில் 6 வட்டாட்சியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி எஸ் பி யிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார்! தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர்,மற்றும் எழுத்தாளர் காந்திமதி நாதன் .இவர் நலிந்த மக்களுக்காகவும் சமூக அநீதி நடைபெறும் செயல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் இவருக்கு சமூகத்தில் நல்ல நற்பெயர் இருந்து வருகிறது. இவர் பொது மக்களுக்கு செய்யும் நல்ல செயல்கள் அரசு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் வரும் வருமானத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாக தெரிகிறது. இவரின் நற்பெயரை கெடுக்கும் நோக்கோடு தூத்துக்குடி மாவட்ட வட்டாட்சியர்கள் தங்களுக்குள் உள்ள whatsapp குரூப்பில் அவரை பற்றி தவறாக தகவல்களை பரப்பி வந்துள்ளதாக  தகவல் தெரிகின்றன  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம்  வாட்சப் குரூப்பில் அவதூறு பரப்பிய ஆறு வட்டாட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார் அந்த அந்த புகாரில் தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும்  வட்டாட்சியர்கள் whatsapp வழியாக தவறான க...

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் தூத்துக்குடி தாசில்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 14.02.2023 நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் தூத்துக்குடி தாசில்தார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் ஞானராஜ்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிரேசி விஜயா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிரேசி விஜயா கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய தனது 2 குழந்தைகளையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கணவர் ஞானராஜ் தன்னுடன் அழைத்து விட்டதாகவும், குழந்தைகளை சரிவர பராமரிக்காமல் அவர் தனது உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், எனவே குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-3ல் கிரேசி விஜயா வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் சேரலாதன் வழங்கிய தீர்ப்பில். குழந்தைகள் தந்தையின் பராமரிப்பில் இருப்பதை விட தாயின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இருப்பதே இயற்கை நீதி எனவே இரண்டு குழந்தைகளிலும் தா...
தூத்துக்குடி எஸ் டி ஆர் விஜய்சீலன் பிறந்தநாள் விழா தாமாக மாநில தலைவர் ஜி கே வாசன் நேரில் வாழ்த்து! தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் 50ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா பொன் விழாவாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி கோரம்பள்ளம் காலாங்கரை சாலையில் உள்ள எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் கலந்துகொண்டு எஸ் டி ஆர் விஜய்சீலனுக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முன்னதாக பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எஸ் டி ஆர் விஜய் சீலன் எஸ்டிஆர் பொன்சீலன் ஆகியவரின் தந்தையின் திருவுருவச் சிலைக்குக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  50 அடி நீளம் உள்ள கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணா திமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. 19 மாதங்கள் ஆட்சியில் இருக்கும் திமுக அரசின் மீது மக்களின் எண்ணம் எதிர்மறையாக உள்ளது அதுவே அதிமுக கூட்டணி  வெற்றி பெற பெரும் உதவியாக இருக்கும். டெல்டா பகுதியில் விவசாயிகள் பெர...

அதானி விவகாரம் பாராளுமன்றத்தில் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை தூத்துக்குடியில் ஜி கே வாசன் பேட்டி!

 ஷ்யாம் நீயூஸ் 09.02.2023 அதானி விவகாரம் பாராளுமன்றத்தில் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை .தூத்துக்குடியில் ஜி கே வாசன் பேட்டி! தூத்துக்குடி மாவட்ட த மா க மாவட்ட தலைவர் எஸ்.டி ஆர் விஜயசீலன் 50வது பிறந்தநாள் விழா கோரம்பள்ளம் காலான்கரை சாலையில் உள்ள எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தாமக மாநில தலைவர் ஜீ கே வாசன் கலந்து கொண்டு விஜயசீலன் தந்தையின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மராயாதை செய்தார் பின்னர் விஜயசீலனை கட்டி அனைத்து வாழ்த்தினர்.50வது பிறந்த நாள் வாழாவில் 50அடி நீளம் உள்ள கேக்கை வெட்டி கொண்டாடப்பட்டது.விழாவில் தூத்துக்குடி தொழிலதிபர்கள் ,விஜயசீலன் சகோதரர் பொன்சீலன் குடும்பத்தார் மற்றும் கட்சி பிரமுகர்கள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். பின்னர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றும் திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் தெரிவித்தார் அதானி குழும விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்று விட்டார் என்ற கேள்விக்கு அதானி குழுமம் ஒரு தனி...
தூத்துக்குடி தனமாக மாவட்ட தலைவர் SDR விஜயசீலன் விழா ஜீ கே வாசன் கலந்துகொண்டு வாழ்த்தினார். தூத்துக்குடி மாவட்ட த மா க மாவட்ட தலைவர் எஸ்.டி ஆர் விஜயசீலன் 50வது பிறந்தநாள் விழா கோரம்பள்ளம் காலான்கரை சாலையில் உள்ள எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தாமக மாநில தலைவர் ஜீ கே வாசன் கலந்து கொண்டு வாழ்ததினர்.50வது பிறந்த நாளை 50அடி நீள கேக் தயார் செய்யப்பட்டிருந்தது.விழாவில்  தொழிலதிபர்கள் மற்றும் விஜயசீலன் சகோதரர் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் கல்விச் சுற்றுலா

 ஷ்யாம் நீயூஸ் 07.02.2023 தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் கல்விச் சுற்றுலா மாணவர்கள் மகிழ்ச்சி! தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக விமானம் மூலம் சென்னைக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வதற்கும் உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வதற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைக் கண்டு இனிமேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது. எனவே மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலர் ஏபிசிவீ. சண்முகம் அவர்களிடம் ஆலோசித்ததில்  மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததுடன் பயணச்செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பதாக கூறினார்கள். மேலும் ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார்.  எனவே வகுப்பில் உள்ள 12 மாணவர்களையும் விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து ச...

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக தினேஷ் குமார் IAS இன்று பதவி ஏற்றார்.

 ஷ்யாம் நீயூஸ் 05.03.2023 தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக தினேஷ் குமார் I A S இன்று பதவி ஏற்றார். தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய ஆணையராக தினேஷ் குமார் இன்று  பதவி ஏற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சாரு ஸ்ரீ தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த தினேஷ்குமார் தூத்துக்குடி புதிய ஆணையராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆணையர் தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சியின் 21 வது ஆணையர் ஆவார். மற்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்கள்  வாழ்வாதத்திற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதுதான் முதல் பணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி அருகே ஆடுகள் விஷம் வைத்து உயிரிழப்பு : தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

ஷ்யாம் நீயூஸ் 04.03.2023   தூத்துக்குடி அருகே  ஆடுகள் விஷம் வைத்து உயிரிழப்பு : தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. தூத்துக்குடி அருகே உள்ள துப்பாஸ்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெள்ளைச்சாமி இவர் ஆடு வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் புதியம்புத்தூர் ஆட்டுச் சந்தையில் வாங்கி வந்த ஐந்து ஆடுகளை தூத்துக்குடி துப்பாஸ்பட்டி எதிரே உள்ள பச்சை மாடன் கோவில் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் வாயில் முறை தள்ளி உயிரிழப்பதை கண்ட அவர் அருகில் சென்று பார்த்தபோது அரிசியுடன் விஷம் கலந்து ஆடுகள் தின்பதற்காகவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ...

தனி கிராமத்து மக்களுக்கு குடிநீருக்கு பதிலாக குளத்து நீரை கொடுத்த கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஷ்யாம் நீயூஸ் 03.02.2023 தனி கிராமத்து மக்களுக்கு குடிநீருக்கு பதிலாக குளத்து நீரை கொடுத்த கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலாங் கரை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அரசால் கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிய குடிநீரை தனியார் ஹோட்டலுக்கும் ,தனியார் நிறுவனங்களுக்கும் தாரை வறுத்து விட்டு கிராம மக்களுக்கு அசுத்தமான குளத்து நீரை குடிநீராக வழங்கி வருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அரசால் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.அரசால்  கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு  வழங்கிய குடிநீரை தனி கிராமமான காலான்கரையை தவிர்த்து மற்ற கிராமங்களுக்கு திருவைகுண்டம் மற்றும் வல்லநாடு கூட்டு குடிநீர் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 03.02.2023 தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாமை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி காலாங்கரை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் மற்றும் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புச் சட்டம் கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த முகாமை தூத்துக்குடி கலெக்டர் மருத்துவர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்தார்.40ஆயிரத்திற்ககும் அதிகமான டோஸ்கள் இருக்கின்றன.தேவைபட்டால் அதிகமான டோஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாட்டு கன்று மற்றும் கோழிகளுக்கான தடுப்பூசி செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் மண்டல இணை இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குநர் டாக்டர் சங்கர நாராயணன், உதவி இயக்குநர் டாக்டர் ஜோசப்ராஜ், புதுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ஆனந்த ராஜ், கால்நடை ந...

அதானி குழும மோசடி விவாதம் கோரிய கனிமொழி எம்.பி யின் கோரிக்கை நிராகரிப்பு.

 ஷ்யாம் நீயூஸ் 02.02.2023 அதானி குழும மோசடி விவாதம் கோரிய கனிமொழி  எம்.பி யின் கோரிக்கை நிராகரிப்பு. இன்று (02/02/2023) டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்தோம்.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.இது சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார் என கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார்.

OTP யை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.பொதுமக்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள்.

ஷ்யாம் நீயூஸ் 02.02.2023  OTP யை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.பொதுமக்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள். OTP யை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று பொதுமக்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000 மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு - செல்போன்களை மீட்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  சுதாகர்,  அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரை...

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தூத்துக்குடியில் தொடங்கியது!

ஷ்யாம் நீயூஸ் 02.02.2023  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தூத்துக்குடியில் தொடங்கியது! மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் தூத்துக்குடி தருவை விளையாட்டு  மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்  இன்று 2.2.23 துவக்கி வைத்தார். தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரபு  மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.அன்டோனி அதிஷ்டராஜ் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். .