முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அ ம மு க உட்கட்சி பூசலால் டெபாசிட் இழந்த தூத்துக்குடி வேட்பாளர்கள்?

SHYAM NEWS
25.05.2019

 அ ம மு க உட்கட்சி பூசலால் டெபாசிட் இழந்த தூத்துக்குடி  வேட்பாளர்கள் ?

நடந்து முடிந்த தமிழ்நாடு புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தி மு க 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றி அபார சாதனை படைத்துஉள்ளது .22 இடை தேர்தலில் 13 தொகுதியில் வெற்றி பெற்றுஉள்ளது .ஆனால் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ ம மு க  கழகம்  போட்டியிட்ட பல இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது .அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் திரு புவனேஷ்வரன்  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளர் திரு சுந்தரராஜ் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றவேட்பாளர்  திரு ஜோதிமணி போன்றோர் மிக குறைவான வாக்குகளை பெற்று உள்ளனர் குறிப்பாக விளாத்திகுளம் வேட்பாளர் மிக குறைவாக வாக்கு பெற்றுள்ளார் அது தூத்துக்குடி மாவட்ட அ ம மு க கழக தொண்டர்களிடேயே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு ஹென்றி ,வடக்கு பகுதி செயலாளர் திரு அசோக்குமார்  மேற்க்கு பகுதி செயலாளர் திரு ஆறுமுகம் ஆகியோர்  சரியாக தேர்தல் பணி செய்யவில்லை என்றும் மறைமுகமாக தி மு க வுக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் மற்றும் மாணிக்கராஜாவின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் ஸ்ரீவைகுண்டம்  நகர செயலாளர் பால்துரையும் எதிராகவே செயல்ப்பட்டார் என்றும் கூறப்படுகிறது .பாராளுமற்ற தேர்தல் மற்றும் ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் இடை தேர்தல் மூன்றுக்குமே கடுமையான உழைப்பை கொடுத்தும் போதிய வாக்கு பெறமுடியாதது பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது .மற்றும் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது பொதுச்செயலாளர் டி டி வி தினகரனிடம் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .இனி வரும் நாட்களிலாவது கருத்து வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என 
தூத்துக்குடி அ ம மு க  தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...