முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படையை கண்காணிக்க தனிப்படை தேவைப்படுகிறதா ?

SHYAM NEWS
07.05.2019
ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படையை கண்காணிக்க தனிப்படை தேவைப்படுகிறதா ?


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தலை முன்னிட்டு பண பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் 90 பறக்கும் படையினர் ஒரு பகுதிக்கு 30 குழு விதம் பிரிக்கப்பட்டு  சோதனை பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.

 இந்நிலையில்   கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை தட்டப்பாறை விளக்கில் பறக்கும் படையினர் உதவியுடன் பண பட்டுவாடா நடைபெறுகிறது என பத்திருக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது .

இதனை கண்டறிய பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து குழுக்களாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் மட்டுமே பறக்கும் படையினர் விழிப்புடன் சோதனை மேற்கொண்டனர்.பின்னர் குறுக்குசாலை விளக்கு அருகே இருந்து பறக்கும் படை குழுவினர் வண்டி எண் TN 69 AA 2634 என்ற வாகன எண் கொண்ட குழுவினர் குறுக்குச்சாலை ரோட்டில் வண்டியை ஓரமாக நிறுத்தி சிலர் மொபைல் போன் களில் படம் பார்த்து கொண்டு இருந்தனர்.சிலர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தனர்.
அச்சமயத்தில் குறுக்கு சாலை - பாஞ்சாலங்குறிச்சி சாலையின் வழியே நான்கு வெவெறு மாவட்ட எண்களை கொண்ட வாகனங்கள் அணிவகுத்து வந்து பறக்கும் படையினர் இருக்கும் இடத்தில் வந்து யூ டார்ன் எடுத்து சென்றனர்.இதனை இதனை கண்டு கொள்ளாத பறக்கும் படையினர் சிலர் தூங்கி கொண்டு இருந்தனர் சிலர் பார்த்து ரசித்தனர்.

பின்னர் தொடர்ந்து தட்டப்பாரை விளக்கு செல்லும் வழியில் உள்ள செக் போஸ்டில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தனர்.

தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைக்க பட்ட பறக்கும் படையினரை கண்காணிக்க தனி படை அமைக்க வேண்டும் போல் உள்ளது.?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...