முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும்!தூத்துக்குடி பிரமாண்ட பேரணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு !

ஷ்யாம் நியூஸ்
01மே 2019


தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும்!தூத்துக்குடி பிரமாண்டமே தின  பேரணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு !


மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தி மு க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி வி வி டி ரோட்டில் மிக பிரமாண்ட பேரணி நடத்தினார் இதில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து வந்து  சிறப்பு ஏற்பாடு செய்து  வைக்க பட்டு இருந்த தொழிலாளர் பூங்கா அடையாளங்களுக்கு கிரீடம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார் .இதில் தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர்  கனிமொழி  கே என் நேரு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன்  ஆலடி அருணா அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் கலந்துகொண்டனர் .தி மு க தலைவர் ஸ்டாலின் பேசுகையில்  .தொழிலாளர்களுக்கு தனது மே தின வாழ்த்தை தெரிவித்ததோடு தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும் .மே 1 தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்தது தி மு க தலைவர் கலைஞ்சர் என்றும் தெரிவித்தார் பா ஜா க ஆட்சியில் தொழிலாளர்கள் நலன் சாசுக்கப்படுகிறது பா ஜா க நாட்டை 4,5 கார்ப்ரேட் கம்பனிகளுக்கு அடகு வைத்துவிட்டனர் பிரதமர் தற்போது உள்ள பிரதமர் நாட்டின் காவலாளி இல்லை நாட்டின் களவாணி என்றும் வருத்தத்துடன்  தெரிவித்தார் .
காலாங்கரை  பெரியநாயகிபுரம் கிராமத்தில்  குடிநீர் கேட்டும் ! தடை இல்லா மின்சாரம் கேட்டும்  தி மு க தலைவர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் கோரிக்கை !
தூத்துக்குடியில் மே தின உரையை முடிந்துவிட்டது ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,பெரியநாயகிபுரம்  கிராமங்களுக்கு மக்களின்   வீட்டு திண்ணைகளில் அமர்ந்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் காலாங்கரை கிராமம் சார்பாக ஊர்த்தலைவர் மற்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் காலாங்கரை கிராமத்தில் குடிநீர் இல்லை  என்றும் குடம் ஓன்று ஓன்று 10 ரூபாய் விலை கொடுத்து வாங்க  வேண்டி உள்ளது  இந்த ஊரில் மிகப்பெரிய குளம் உள்ளது அதை  ஆழப்படுத்தினால்  விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் குடிநீர் பிரச்சனையும் தீரும்  காலங்கரையில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் இல்லாததால் சிறு குழந்தைகள் சமுதாய கூடங்களில் தங்க வேண்டிய நிலை உள்ளது ஆகவே அங்கன்வாடி கட்டிடம் கட்டவும் கோரிக்கை வைத்தனர் அதற்கு தி மு க ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றை நிறைவேற்றி வைக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமமக்களுக்கு தி மு க தலைவர் ஸ்டாலின் மற்றும் அப்பகுதி பாராளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி இருவரும்  உறுதி அளித்தார் .அதுபோன்றே பெரியநாயகிபுரம் பொதுமக்களும் குடிநீர் குளம் ஆளப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வைத்தனர் .காலாங்கரை கிராமத்தில் கூட்டம் ஆரம்பம் ஆவதற்கு முன்னாள் அந்த ஊரை சார்ந்த திருமணி மகன் குட்டியம்மா வன்முறையை தூண்ட முயற்சி செய்ததும் புதுக்கோட்டை ஆய்வாளர் திரு திருமலை அவர்கள் தலைமையில் போடப்பட்ட சிறப்பான பாதுகாப்பை பார்த்து அந்த உள்ளூர் ஆசாமி வாலை சுருட்டியதும் அதை பார்த்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர் .கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்த புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு திருமலை அவர்களுக்கும் பொறுப்பாளர்கள் கோரம்பள்ளம் மாடசாமி ,ஜெயக்கொடி மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...