முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ரெப்கோ நுண்கடன் நிறுவனம் 2018-19ம் ஆண்டு நுண்கடன் வளர்ச்சி 30 சதவீதம், நிகரலாப வளர்ச்சி 57 சதவீதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்

       தூத்துக்குடி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுபாட்டிலும், தென்மாநில அரசுகளின் பங்கேற்பிலும், 1969ம் ஆண்டு துவங்கப்பட்ட ரெப்கோ வங்கியால் 2007ம் ஆண்டு துவக்கப்பட்ட ரெப்கோ நுண்கடன் நிறுவனம் மகளிரின் வாழ்வாதாரத்தை நுண்கடன் மூலம் உயர்த்த முடியும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் மகளிர் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாடு நடடிவக்கைகள் மற்றும் தொழில் முனைவு பயிற்சிகள் அளித்து வருமானம் ஈட்ட வகை செய்துள்ளது.

     நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் நுண்கடன் வழங்குவதில் 30 சதவீத வளர்ச்சி அடைந்து கடன் வழங்குதல் தொகை ரூ927 கோடியடைந்து, நிகர லாபம் 57 சதவீத வளர்ச்சி கண்டு, நிகர மதிப்பு ரூ166 கோடியை கடந்து செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 33 மாவட்டம் யூனியன் பிரதேசம் புதுச்சேரி உள்பட 90 கிளைகளுடன் செயல்படுகிறது. மொத்த வராக்கடன் 0.87சதவிதம் மற்றும் நிகர வராக்கடன் பூஜியம் கொண்டுள்ளது. சிறந்த  அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் கொண்டு இடர் மேலாண்மை செயல்முறை அமைக்கப்பெற்று நாட்டின் முதன்மையான நுண்கடன் நிறுவனமாக செயல்படுகிறது. சமுதாயத்தில் பிறர் போன்ற உரிமைகள் பெறப்படாதோரின் வாரிசுகள் பயிலும் பள்ளிகளுக்கு கழிப்பறைகள் மற்றும் வகுப்பறை கட்டுதல், உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குதல் இலவச மருத்துவமுகாம், சுகாதாரமான குடிநீர் ஏற்படுத்தி தருதல் போன்ற சமுதாய பணிகளை செய்கிறது.

      வரும் 2019-20ம் நிதியாண்டில் ரூ1300 கோடி நுண்கடன் நிலுவை தொகையையும், 110கிளைகளையும் இலக்காக கொண்டு கேரளா, கர்நாடகா, ஓரிசா மாநிலங்களுக்கு நுண்கடன் திட்டத்தினை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  என்று மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...