ஷ்யாம் நியூஸ்
26.03.2019
துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: சினிமா டைரக்டர் ஹரி உட்பட 8பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
செவ்வாய் 26, மார்ச் 2019
தூத்துக்குடியில் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சினிமா டைரக்டர் ஹரி உட்பட 8பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடார் மக்கள் சக்தி தலைவர் ஹரி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆதரவாளர்கள் 7பேர் வரவேற்று, காரில் நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் இந்த கார் சென்றபோது பறக்கும் படை தாசில்தார் நடராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் ரிவால்வர் மற்றும் 34 தோட்டாககள், 15 காலி தோட்டா இருப்பது தெரியவந்தது.
காரில் டைரக்டர்
ஹரி பாதுகாப்பிற்காக வந்த முன்னாள் ராணுவ வீரரான உ.பி.யைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ் என்பவரிடம் இந்த துப்பாகி இருந்தது தெரியவந்தது. தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்ற காரணத்தினால், அதிகாரிகள் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து ஹரி உட்பட 8பேரையும் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா, ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஹரி பாதுகாப்பிற்காக வந்த முன்னாள் ராணுவ வீரரான உ.பி.யைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ் என்பவரிடம் இந்த துப்பாகி இருந்தது தெரியவந்தது. தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்ற காரணத்தினால், அதிகாரிகள் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து ஹரி உட்பட 8பேரையும் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா, ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஹரி உட்பட 8பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு: சென்னை தேனாம்பேட்டை ஆணையம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த ராமு மகன் சதீஷ்குமார், திருநெல்வேலி மேல இலந்தைகுளம் அருணாசலம் மகன் ஹரி என்ற ஹரி கோபாலகிருஷ்ணன் (37), சந்திரசேகர் மகன் சதீஷ்குமார், தேனாம்பேட்டை ராஜா மகன் சதீஸ் (29), முருகன் மகன் விக்னேஷ் கார்த்திக், ஆலங்குடி சுரேஷ் மகன் பாபு (24), மேல இலந்தைகுளம் மகாலிங்கம் மகன் சோலைக்குமார், உபியைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ். மேலும் ரிவால்வர், தோட்டாக்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.