முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண்ணை வீடும் !பொய் வழக்கும்! அனிதா?

ஷயாம்நீயுஸ் 

29.0302019

பண்ணை வீடும் !பொய் வழக்கும்!  அனிதா?




தேர்தல் விதிமுறைகளை மீறிய தமிழிசை செளந்தரராஜன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும்ஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு மனு அளித்தனர். 

பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இருபது நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை வைத்து பொய்யான புகார் அளித்து திமுக வேட்பாளர் கனிமொழி மீதும் என் மீதும் பொய்வழக்கு பதிந்துள்ளனர். அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை தேர்தல் விதிமுறைகளை மீறி மதத்தின் பெயரை கூறி ஓட்டு கேட்டுள்ளார். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் ?. பொய்புகார் கொடுத்து எங்கள் தேர்தல் பணிகளை முடக்க பார்க்கின்றனர். முதல்வர் எடப்பாடி மற்றும் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் எங்கள் மீது பொய் வழக்கு பாேடப்பட்டுள்ளது. 

பொய்புகார் மூலம் எங்களை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்து பாேவார்கள். எங்கள் மீதான பொய்வழக்கை உடனே ரத்து செய்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முத்துராமலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எங்கள்கட்சி தலைமை முடிவு படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...