முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவிகளை புரட்சி செய்ய அழைக்கும் தூத்துக்குடி ஐ ஏ எஸ் அதிகாரிகள் !

ஷயாம் நியூஸ்
14.03.2019

மாணவிகளை புரட்சி செய்ய அழைக்கும் தூத்துக்குடி ஐ ஏ எஸ் அதிகாரிகள் !


தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் திரு சந்திப் நந்தூரி (இ ஆ ப ) தொடங்கி  விட்ட நிலையில்  தூத்துக்குடி ஏ பி சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் (14.03.2019) மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வினை வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது .கல்லூரி முனைவர் .திருமதி .சத்யபாமா அவர்களோடு என் சி சி மாணவியரும் இணைந்து  ஆட்சியர் அவர்களுக்கு முறையான வரவேற்பினை வழங்கினர் .ஆட்சியரோடு மாவட்ட ஆணையர் திரு வி பி ஜெயசீலன் ஐ ஏ எஸ்  உதவி ஆட்சியர்  திருமதி அணு ஐ ஏ எஸ் ஆகியோர்கலந்துகொண்டனர் .தொடர்ந்து மாணவியரின் கைவண்ணத்தில் உருவான தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களை உள்ளடங்கிய ரங்கோலி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து  ஆட்சியர் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .

கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்  தேர்தல் விழிப்புணவு வாசகங்களடங்கிய பதாகைகளோடு வளம் வந்தனர் தெருக்கூத்து மற்றும் விழிப்புணவு நாடகமும் நடைபெற்றது .விழாவில் ஆட்சியர்கள் பேசுகையில் தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவில் நம் அனைவரும் கலந்து கொண்டு தவறாமல் வாக்களித்து ஒரு விரல் புரட்சி செய்யவேண்டும் என்றும் நம் குடும்பத்தில் 18 வயதுக்கு  மேல் உள்ள அனைவருக்கும் வாக்குஅளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்து கூறி வரும் ஏப்ரல் 18 2019 அன்று வாக்களித்ததை உறுதி செய்யவேண்டும் எனவும் கலந்து கொண்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் அனைவரும் கேட்டுக்கொண்டனர் .இந்நிகழ்விற்கு கல்லுரியின் முதல்வர் அனைவரையும் வரவேற்றார் .தமிழ்த்துறை மாணவி செல்வி .பொன்கணகாவின் உரையை தொடர்ந்து அனைவரும் தவறாமல் வாக்களிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது .புது வாக்காளர்களுக்கு மாதிரி வாக்கு எந்திரம் வைத்து செயல்முறை விளக்கங்களையும் ஆட்சியர் செய்து காட்டிணார் கல்லூரி மாணவிகள் மாதிரி வாக்குகள் அளித்தோடு மட்டும் அல்லாமல் சந்தேகங்களை கேட்டும்தெரிந்துகொண்டனர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...