முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி!



SHYAM NEWS 
26.03.2019
21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி!
21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது, வறுமை மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, 20 சதவீதம் ஏழை மக்களுக்கு மாத வருமானம் ரூ.12 ஆயிரம் கிடைக்க வகை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், கங்கா நகர் மாவட்டம், சூரத்கார்க் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
இதில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
''காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் ஏழ்மை மீது துல்லியத் தாக்குதல் நடத்தப் போகிறது. தேசத்தில் இருந்து ஏழைகளை விரட்ட பாஜக முயற்சித்தது. நாங்கள் ஏழ்மையை விரட்ட முயற்சிக்கிறோம்.
ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானம் தான் எங்களின் மிகப்பெரிய திட்டம். இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்தோம்.இதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 சதவீத ஏழை மக்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வருமானம் கிடைக்க உறுதி செய்யப்படும்.
மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை அதிகரித்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 14 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டார்கள். இப்போது  அந்த மக்களை மீண்டும் ஏழ்மையில் மோடி தள்ளிவிட்டார்.
21-ம் நூற்றண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது. காங்கிரஸ் அரசு செயல்படுத்தி கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தையும் பாஜக அரசு பலவீனப்படுத்திவிட்டது. இதனால், வேலை வாய்ப்பும், வறுமையும் அதிகரித்துள்ளது.
மக்களின் பணத்தைத் திருடி நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு வழங்கி உதவி செய்கிறது. அவர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது, ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
கடந்த தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், யாருக்கும் வேலையும் வழங்கவில்லை, பணமும் டெபாசிட் செய்யவில்லை.
மோடி, தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசி வாக்குறுதியாக வழங்குகிறார். தன்னைப் பிரதமராக்க வேண்டாம், மாறாக நாட்டின் காவலாளியாக மாற்றுங்கள் என்று பேசினார். ஆனால், ஒருபோதும் மக்களின் காவலாளியாக இருப்பேன் என்று மோடி சொல்லவில்லை. மோடி அனில் அம்பானியின் காவலாளியாக இருக்கிறார்.
வங்கியில் இருக்கும் மக்களின் பணத்தை எடுத்து மத்திய அரசு, மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, அருண் ஜேட்லி ஆகியோருக்கு வழங்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்கள்.
அமித் ஷாவின் மகன் ரூ.50 ஆயிரத்தில் தொழில் தொடங்கி, சில மாதங்களில் கோடிக்கணக்கில் லாபம் எவ்வாறு ஈட்ட முடிந்தது? வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய தொழிலதிபர் மெகுல் சோக்சி வங்கி மூலம் ஜேட்லி மகளுக்குப் பணம் அனுப்பினார். விஜய் மல்லையா நாட்டை விட்டுத் தப்பும் முன் ஜேட்லியை சந்தித்துவிட்டுச் சென்றார்''.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...