முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.








SHYAM NEWS 
25-.03.2019



தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். 




   






தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், பல கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்து வருகின்றனர். இதையடுத்து, தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் இன்று மனுதாக்கல் செய்தார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து எம்.பி, கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு நிச்சயமாக இந்த தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளது. நீர் மேலாண்மை சரியாக செய்யப்படாததால் பல குளங்கள் தூர்வாரப்படாத நிலையில் உள்ளன. சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சுமார் 10 வருடங்களாக சில கிராமங்கள் உள்ளன. எனவே, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வித புதிய தொழில்களும் இப்பகுதிக்கு வரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது, ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்றவை காரணமாக ஏற்பட்ட குழப்பங்களால் இங்கு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் இங்கு நான் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, நிச்சயமாக இப்பகுதிக்கு தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும், பன்னாட்டு விமானங்கள் வரும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுப்படுத்த நவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை திமுக அனுமதிக்காது. மீனவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...