தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
SHYAM NEWS
23.07.2019
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
இது தொடர்பாக பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை குமார் ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 437-வது ஆண்டு திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 25ம் தேதி மாலை கொடி பவனி நடைபெறுகிறது. ஜூலை 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். அன்று காலை 7.30 ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 8.30மணிக்கு கொடியேற்றமும் நடைபெறும். அன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு முதன்மை குரு ரோலிங்டன் தலைமையி்ல் பொன் மகுடம் சூட்டப்படுகிறது.
6ம் நாள் திருவிழாவான ஜூலை 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி (திங்கட்கிழமை) அன்னையின் பெருவிழாவான அன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30மணிக்கு 2ம் திருப்பலியும் கோட்டார் ஆயர் நசரேன் தலைமையில் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 9மணி மற்றும் 10 மணிக்கும் மறைமாவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் 5.30 மணிக்கு ஆடம்பர திருப்பலியும் நடக்கிறது. 10 மணிக்கு புனித பணிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக் கொடுத்தல் நற்கருணை ஆசீர் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை எனது தலைமையில் இறைமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். பேட்டியின் போது, உதவி பங்குத்தந்தை கிங்க்ஸ்டன், ஜேசுராஜா, அருட் சகோ மைக்கேல் ஆகியோர் உடனிருந்தனர்.