முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் வருகிற 25ம் தேதி துடிசியா சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு (BUYER SELLER MEET) நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 SHYAM NEWS
23.07.2019


தூத்துக்குடியில் வருகிற 25ம் தேதி துடிசியா சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு (BUYER SELLER MEET)  நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக துடிசியா நேரு பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கமானது ஓர் பதிவு செய்யப்பட்ட, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இந்த சங்கமானது 1991 முதல் சீரிய முறையில் செயல் பெற்று வருகிறது. இந்த சங்கத்தில் 450 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து உறுப்பினராய் உள்ளனர். குறிப்பாக உப்பு உற்பத்தி, உணவு உற்பத்தி,கனரக தளவாட உற்பத்தி, அச்சுத் தொழில், இரசாயனம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் பதிவு செய்து உள்ளது. 

"துடிசியா” என்னும் இந்த அமைப்பானது, தொழிற்துறைகளின் தேவைகள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது மாவட்டத்தில் சிறு தொழில் வலுப்பெற உதவி புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் உள்ள தொழில் முனைகள் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நமது மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல், பயிற்சி அளித்தல், மேலும் அவர்கள் தொழில் தொடங்கி சிறப்புற நடத்திட தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறது.

துடிசியாவின் முக்கிய சாதனைகள் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை நடைபெறும் "TIE" என்ற தூத்துக்குடி மாவட்ட தொழில் கண்காட்சியை குறிப்பிடலாம். இதில் பல வெளிநாட்டு கம்பெனிகள், பிற மாநில கம்பெனிகள் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நிறுவனங்கள் பங்கு பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி உள்ளனர் என கூறினால் மிகையாகாது. மேலும் எங்களது துடிசியா சங்கத்தின் மணி மகுடமாக பெரும் நிறுவனம் / பொது நிறுவனம் மற்றும் சிறு நிறுவனம் குறு நிறுவனங்கள், ஒப்பந்த்தாரர்கள் பங்கு பெறும் "BUYER SELLER MEET” – DSF GRAND PLAZA –ல் வைத்து 25/07/2019 –ம் தேதி அன்று நடைபெற உள்ளது. 

இந்த சந்திப்பின் நோக்கமானது பெரும் நிறுவனங்களின் தேவைகள், பொருட்கள் வழங்கல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செய்ய கூடிய வேலைகள் பற்றிய விவரங்களை எடுத்துரைப்பர். இதில் பங்குபெறும் நமது மாவட்டத்தில் உள்ள மற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதின்படி புரிந்துணர்வு ஏற்படுத்தப்படும் இதனை நமது மாவட்டத்திற்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்குழு சந்திப்பின் ஏற்பாடுகளை துடிசியா அமைப்பின் தலைவர் நேரு பிரகாஷ் செயலாளர் ராஜ செல்வின் மற்றும் SKSC தர்மராஜ் ஆலோசனை மற்றும் செயல் திட்டதோடும் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்போடும் சீரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொழில் சங்கம விழாவை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் நாகராஜன் முன்னிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தலைவர் ராமசந்திரன் தலைமையிலும், பாளையங்கோட்டை பெல் பின்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குனர் குணசீலன் செல்லதுரை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர். இந்த சங்கமத்தில் ஸ்பிக், டாக், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், என்.டி.பி.எல், கோஸ்டல் எனர்ஜின், மகா சிமென்ட்ஸ், ஜிர்கோனியம் காம்பெளக்ஸ், வி.வி.டைடானியம், டி,சி,டபுள்யு, சிவா பிளவர்ஸ், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் போன்ற கனரக தொழிற் சாலைகள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த வாயப்பினை பயன்படுத்தி அனைவரும் இந்த தொழில் சங்கம விழாவில் கலந்து கொண்டு பயனுற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்..
Attachments area

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...