முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய ஆவண படுகொலை!

 SHYAM NEWS 28.07.2025 தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய ஆவண படுகொலை! தூத்துக்குடி  ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின் இவர் தன் காதலியின் அழைப்பின் நம்பிக்கையில் நெல்லைக்கு சென்ற கவியின் காதலியின் தம்பி நேற்று (27.07.2025)ஆவண படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் சாதீய ஆணவத்தால்  கொல்லப்பட்ட மென் பொறியாளர் கவின், யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம். அப்பா சந்திரசேகர் நிலக்கிழார் (விவசாயி), அம்மா செல்வி  ஆசிரியை. தாத்தா செல்லத்துரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். ஆறுமுகமங்கலம் எனும் சிறிய தாமிரபரணி பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்ற கிராமம். அவர் பேசிப் பழகிய பெண்ணின் தாயும், தந்தையும் போலிஸ். பெண் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவர். பெண்ணின் தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9 ஆம் அணியில் சார்பு ஆய்வாளராகவும் பெண்ணின் தந்தை சரவணன்  ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணி சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்ற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

தூத்துக்குடியில் அட்டகாசம்!அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்; ஊழியர்களின் மண்டை உடைப்பு

 ஷ்யாம் நியூஸ்  21.04.2025 தூத்துக்குடியில் அட்டகாசம்அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்; ஊழியர்களின் மண்டை உடைப்பு - தூத்துக்குடியில் அட்டகாசம் தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிராஜாவின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தென் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் தூத்துக்குடிக்கு வருகை தந்து கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பி செல்லும் போது தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் டோல்கேட்டில் அவர்கள் சென்ற கார்களை டோல்கேட் பணியாளர்கள் நிறுத்தி டோல்கேட் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து கார்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து டோல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கி டோல்கேட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். டோல்கேட் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தாக்கி...

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள் மீது வழக்கு பதிவு!

ஷ்யாம் நீயூஸ் 18.04.2025  தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள்  மீது வழக்கு பதிவு ! தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சமத்துவ புரத்தைச் சார்ந்தவர் ஓட்டக்காரன் த/பெ தங்கராஜ் இவர் பாலிடெக்னியில் தொழிற்கல்வி படித்து அரசு வேலைக்காக காத்திருந்தார். இதனை அறிந்த அதே ஊரை சார்ந்த பத்திரகாளி க/ பெ முருகன் அவரை தொடர்பு கொண்டு தான் சென்னை தலைமை செயலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலக உதவி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக 2022ம் ஆண்டு ரூபாய்  5 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை நான்கு தவணையாக வங்கிக் கணக்கின் மூலமும், ஜிபே மூலமும் வாங்கி   ஏமாற்றியுள்ளனர். ஓட்டக்காரனிடம் போலியாக  பணி நியமண ஆணை   தாயார் செய்து அதன் நகலை ஓடக்காரனிடம் பத்திரகாளி   வழங்கியுள்ளார். மற்றும் ஒரிஜினல் ஆணை தலைமைச் செயலகத்தில் இருந்து விரைவில் வரும் என்று கூறி இந்த பண மோசடி வசூலில் பத்திரகாளி உட்பட குமரேசன் த/பெ பாண்டியன், விருதுநகரை சேர்ந்த தேவேந்திரன் த/பெ சுந்தரம் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு ஒ...

தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம் மேல் முறையிடு செய்ய ஆலோசனை !

  SHYAM NEWS 17.04.2025 தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம்  மேல் முறையிடு செய்ய ஆலோசனை ! தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை ரத்து செய்து, சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது. அதேபோல, திருச்செங்கோடு வட்டக்கொங்கு வேளாளர் சங்கம், தி புவர் எஜுகேஷனல் ஃபண்ட் ஆகியவற்றின் சார்பில் வெவ்வேறு கோரிக்கைகளோடு வேறு சில வழக்குகளும் தொடரப...

தூத்துக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி ஊழல் !கட்டு காட்டாக சுருட்டும் அதிகாரிகள் !

 ஷ்யாம் நியூஸ் 10.04.2025  தூத்துக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி ஊழல் !கட்டு காட்டாக சுருட்டும் அதிகாரிகள் !  தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்ந்து எடுப்பதில் ஊழல் கிராமங்களில் சாலை அமைப்பதில் ஊழல் கிராமம் தோறும் குடி தண்ணீர் வழங்குவதில் ஊழல் .டெண்டரில் ஊழல்  என ஊழல் மயமான தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அடாவடிக்கு கடிவாளம் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வரி பணத்தை  விரயம் செய்கின்றனர் . கோரம்பள்ளம் பஞ்சயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அரசு  குடியிருக்க வழங்கிய நிலத்தை விற்பனை செய்தவருக்கு மீண்ட...

தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம் கூட்டம் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ் 10.04.2025 தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம் கூட்டம் நடைபெற்றது 10.04.2025 இன்று தூத்துக்குடி அக்குமென் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையிலும் மாணிக்கம் பொருளாளர் முன்னிலையிலும் டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம்  கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் கருத்துரை வழங்கினார்.ஏ ஐ டி யூ சி  சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கடைகளில் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், விற்பனையாளர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற வேண்டும், அனைத்து கடைகளுக்கும் சமமான மது பெட்டிகளை அனுப்பி வைக்க வேண்டும்,சில கடைகளில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட மேற்பார்வையாளர்க்கு பதிலாக நிரந்தர மேற்பார்வையாளர் பணி அமர்த்த வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் மாவட்ட மேளாலரை சந்தித்து குறைதீர்க்கும் மணு கொடுக்க முடிவு செய்யப்பட்டது‌

டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 SHYAM NEWS 06.04.2025 டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  தூத்துக்குடி அருகே உள்ள மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் உப்பள தொழிலாளி இவரை கடந்த 17.9.1999 அன்று வழக்கு விசாரணை ஒன்றிற்காக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அப்போது உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்துள்ளனர். இதில் கடந்த 18.9.1999 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் வைத்து வின்சென்ட் மர்மமான முறையில் இறந்தார்.  இதைத்தொடர்ந்து வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள் என்பவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று இந்த லாக்கப் மரணம் தொடர்பாக காவலர்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு ச...

பிரதமர் மோடி ஓய்வு பெறுகிறாரா? - பரபரப்பு கருத்து!

 SHYAM NEWS 01.04.2025 பிரதமர் மோடி ஓய்வு பெறுகிறாரா? -  பரபரப்பு கருத்து! குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 மற்றும் 2024 என அடுத்தடுத்து  நடைபெற்று மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேல் உள்ளவர் ஆட்சியில் பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயது நிறைவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதே சமயம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி நேற்று (30.03.2025) சென்றிருந்தார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி செல்வது இது முதல் முறையாகும். இந்நிலைய...

100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் உயர்வு; அரசு அறிவிப்பு

  SYAM NEWS 28.03.2025 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் உயர்வு;  அரசு அறிவிப்பு 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை 17 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த அறிவிப்பானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர இருக்கிறது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 SHYAMA NEWS 25.03.2025 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (25.03.2025) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர...

பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி காலமானார்

  SHYAM NEWS 25.03.2025 பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி காலமானார் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48. பாரதிராஜ் இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவரின் மறைவுக்கு தி மனோஜ் பாரதியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ...

தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மீனுக்கு 'தமிழிகம்' என பெயர்?

 SHYAM MEWS 21.03.2025 தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய  மீனுக்கு 'தமிழிகம்' என பெயர்? மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட கார...

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை!

 SHYAM NEWS 15.03.2025 எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை! கரூர் மாவட்டம் நேரூர் என்ற கிராமத்தில் சத்குரு சதாசிவ சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு கடந்தாண்டு மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பக்தர்கள் வழிபாட்டு முறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அதற்கு அ...

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி -முதல்வர் M K ஸ்டாலின் !

SHYAM NEWS 09.03.2025   மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி -முதல்வர் M K ஸ்டாலின் !   மாற்றுத்  திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரியப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். என தொழிலாக முதல்வர் அறிவித்துள்ளார் . சென்னை கொளத்தூர் உள்ள பெரியார் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.02.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,எல்லா பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிப்பது போன்று இந்த பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிக்கிறேன் ,  மாற்றுத் திறனாளிகள் என்ற பெயர் கொடுத்து, சகோதர சகோதரிகளின் சுயமரியாதையைக் காத்தவர் கலைஞர். அவரது வழியில், அந்த துறையை என்னுடைய பொறுப்பில் வைத்துக்கொண்டு, நிறையத் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் மாற்றுத்தி...

தமிழகத்துக்கு 61 MP தமிழக கட்சிகள் உறுதி !

ஷ்யாம் நியூஸ்  05.03.2025 தமிழகத்துக்கு 61 MP தமிழக கட்சிகள் உறுதி ! தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் சூடு பிடித்துவரும் வேளையில் அனைத்து கட்சி கூட்டம்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமயில் சென்னையில் நடைபெற்றது . இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியது . இந்தக் கூட்டத்தில் 63 அரசியல் காட்சிகள் கலந்து கொண்டன . இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில்  பேசிய முதல்வர் ஸ்டாலின், "இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால்,...

சீமான் ஒரு விபச்சாரன் தி. க அதிரடி பதில்

 SHYAM NEWS 03.03.2025 சீமான் ஒரு  விபச்சாரன் தி. க அதிரடி பதில் ! பெண் விபச்சாரி என்றால் ஆணுக்கு பெயர் "விபச்சாரன்".. சொன்னதும் பெரியார்தான்.. சீமானுக்கு திக பதிலடி! இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி கூறியிருப்பதாவது: ஆணாதிக்க சமூகத்தில், எந்த வார்த்தை சொன்னால் பெண்களே சக பெண்ணை இழிவாக நினைப்பார்கள் என்பதை தெரிந்துக் கொண்டும், தான் செய்த கேவலமான குற்றத்திற்கு தண்டனை உறுதி என்று தெரிந்து பயத்தின் உச்சத்தில் கதறி துடிக்கும் விபச்சாரன் சீமான். அய்யோ எங்க அண்ணனை விபச்சாரன் என்று எப்படி சொல்லலாம் என்று அலறிக்கொண்டு எங்களை திட்ட கெட்ட வார்த்தை தேடாதீர்கள். 'சீமான்' என்ற சொல்லே நிகழ்கால அரசியல் சூழலில் மாபெரும் கெட்ட வார்த்தைதான்! தந்தை பெரியார் பேசாத பல கருத்துகளை அவர் பேசியதாக சொல்லிக் கொண்டு திரியும் கூட்டமே, அதில் உண்மையாக அவர் சொன்ன ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண் விபச்சாரி என்றால் அந்த ஆணுக்கு பெயர் "விபச்சாரன்" தானே என்றார். விரும்பிய பெண்ணை கிஞ்சித்தும் அறமின்றி பேசும் 'விபச்சாரன் சீமான்'. பொது வெளியில் இதுபோன்ற ...

சீமான் வழக்கு இடைக்கால தடை வழங்கியது உச்சநீதிமன்றம் !

ஷ்யாம் நியூஸ்  03.03.2025  சீமான் வழக்கு இடைக்கால தடை வழங்கியது உச்சநீதிமன்றம் ! வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கு இடைக்கால தடை வாங்கி உள்ளார். நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு இன்று விசாரிக்கப்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் .உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு சாதகமாக உத்தரவு வர அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணம் ஆகும். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நா...

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000.! உதயநிதி ஸ்டாலின் !

 SHYAM NEWS 03.03.2025 அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000.! உதயநிதி ஸ்டாலின் ! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலருக்கு வழங்கப்படாததால் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் மே மாதத்திலிருந்து அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்வதுபோல பேசியிருக்கிறார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின். மேலும் பட்ஜெட் தாக்கலின் போது இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” - முதல்வர்!

 SHYAM NEWS 02.03.2025 கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” - முதல்வர்! 2024 - 25ஆம் கல்வியாண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே நாளை (03.03.2025) மற்றும் மார்ச் 5 (05.03.2025) அன்றும் தொடங்க இருக்கின்றன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ - மாணவியர்களும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ - மாணவியர்களும்தேர்வெழுதவுள்ளனர். கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள். ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும்,  தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது  அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கிய...