முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை..

ஷ்யாம் நீயூஸ் 05.12.25 ஊர் தலைவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை. ஊர் தலைவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட இளம் சிறார் நீதி குழுமம். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா(45). இவர் கல்லூரணி ஊர்த்தலைவராக இருந்துள்ளார். கடந்த 12.08.2008 அன்று கல்லூரணி ஊரில் உள்ள காளியம்மன் கோவில் கொடைவிழாவின் போது, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன் என்ற குச்சிமுருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனை சுப்பையா கண்டித்து உள்ளார்.  தொடர்ந்து ஊர் கூட்டத்திலும் 3 பேரையும் சுப்பையா கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், கடந்த 14.08.2008 அன்று சுப்பையா, அவரது மகன் ராஜாவுடன் குளத்தூர்-கல்லூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையா...

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது.

 ஷ்யாம் நீயூஸ் 01.12.25 காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது.  டாஸ்மாக் பணியாளர் சங்கம் கூட்டமைப்பு கோரிக்கை!  தூத்துக்குடி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெற வேண்டும் என்ற திட்டத்தினை ஏற்க மறுத்து தூத்துக்குடியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கம்  கூட்டமைப்பு சார்பாக மாவட்ட மேலாளார் ஐயப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்   நிர்வாகத்தால் நியமிக்கப்படும் காலி பாட்டில் எடுக்கும் ஏஜென்ட், பார் ஒப்பந்ததாரர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் காலி பாட்டில் சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் கடை பணியாளர்களை எந்த நிர்பந்தமும் செய்யக்கூடாது.  காலி பாட்டில் திரும்ப பெரும் ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளர் அந்தந்த கடை எண் உள்ள ஸ்டிக்கர்களை கடை பணியாளர்களிடம் ஒப்படைத்து  பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். பார் ஒப்பந்ததாரர் அன்றைய தினத்தில் வழங்கும் ஸ்டிக்கருக்கான தொகையினை மறுநாள் கடை திறந்த பின்பு வழங்கப்...

நவ.27ல் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

ஷ்யாம் நீயூஸ் 21.11.25 நவ.27ல் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-1 சிவசண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் நேரு நகரில் உள்ள நேரு நர்சிங் கல்லூரியிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி எஸ்.வி.நகரில் உள்ள எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரியிலும் நடக்கிறது. இதில், வருங்கால வைப்புநிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் ந...

ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்

 SHYAM NEWS 20.11.2025 ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்  மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும், அப்படி செய்தால் கட்டுப்படுத்தப்பட்ட/ குறுகிய (limited) நீதிமன்ற மறு ஆய்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட காலக்கெடு விதிப்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று (நவ. 20) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்ச நீ...

மாற்றுத்திறனாளி கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினாா்.

  ஷ்யாம் நீயூஸ் 20.11.2025 மாற்றுத்திறனாளி கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினாா்.     தூத்துக்குடி உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் டோர்னமென்ட் போட்டியை தூத்துக்குடி கோமதிபாய் காலணியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தமிழக மாற்று திறனாளிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறந்த சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏலத்தில்  தேர்ந்தெடுக்கப் பட்டு சம பலத்துடன் மோதினர். இது உலகின் முதன்முறையாகும்.      இது ட்ரயம்ப் புக் ஆப் வல்ட் ாிக்காட்ஸ் நிறுவனத்தாரால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்.அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக அளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வி...

அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்!

 ஷ்யாம் நீயூஸ் 19.11.25 அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்! கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்பது திருக்குறள். இதன் பொருள்ருள், கற்க வேண்டிய நூல்களை எந்தக் குறையும் இல்லாமல் கற்க வேண்டும், அப்படி கற்ற பிறகு, அந்த கல்விக்குத் தகுந்தபடி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் இன்று  அப்படி இல்லை அத்தி பூத்தாற் போல் ஒரு சிலரை தவிர ஐஏஎஸ் போன்ற உயர் படிப்பு படித்து பணிக்கு வந்தாலும்  குறுகிய காலத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதுதான் நோக்கமாக பலருக்கு உள்ளது. தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராக (பொறுப்பு) டி ஆர் டி ஏ ஐஸ்வர்யா IAS பணிபுரிந்து வருகிறார். இவர் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது இதை தடுத்து நிறுத்த வேண்டிய இவர் தான் பணியில் சிறந்ததாக பணிபுரிவதாக படம் எடுத்து சமூக வலைதளங்கள் பதிவிட்டு தன்னை நேர்மையானவர் என்று காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் கீழ் உள்ள துறையான ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து என அனைத்து துறைகளிலும் தற்போது மலை போல் ஊழல் மலிந்து ஊழலுக்கே மதிப்பில்லாமல் போய்க் கொ...

தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .

ஷ்யாம் நீயூஸ் 19.11.2025   தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .  கோயம்புத்தூர், PN புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் 5 பயிற்சி டாக்டர்களும் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். காரை சாருபன் ஒட்டி சென்றுள்ளார். கார் பீச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்ததால் ரோடு சரியாக தெரியாததால் கார் நிலை தடுமாறி அருகிலுள்ள வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. 5பேரும் காருக்குள் சிக்கி கொண்டனர்  இது குறித்து அந்தப் பகுதியில் சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனட...

மழைகாலத்தையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு குடை வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நியூஸ்  15.11.2025 மழைகாலத்தையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு குடை வழங்கப்பட்டது.  வடகிழக்கு பருவமழையை யொட்டி தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் மழைகோட் வழங்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் மழை கோட் வழங்கினாா். இந்நிலையில் பிரஸ்கிளப்பில்வைத்து உறுப்பினா்களுக்கு குடை வழங்கப்பட்டது.         நிகழ்ச்சியில், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர் சரவணன், உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்ம...

தூத்துக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 15.11.25  தூத்துக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவோியாா்புரம் புனித சேவியஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளா் குழந்தை ராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிாியை மாிய செல்வராணி, வரவேற்புரையாற்றினாா்.  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் லையன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் பாிசுகள் வழங்கி மற்றும்  ஆரோவாட்டா் பில்டா் வகைக்கு ரூ10 ஆயிரம் வழங்கி பேசுகையில் கல்வி என்பது தான் எல்லோருடைய வாழ்க்கைக்கு முதல் அடித்தளம் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்வதை கேட்டு அனைவரும் நடக்க வேண்டும். என்று பேசினாா்.      விழாவில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத்தலைவா் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால்,  இயக்குநா்...

பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்

  SHYAM NEWS 13.11.2025 பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்,        பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார் . தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன ரோல்? ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்று பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி கேட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது தரம் தாழ்ந்த அரசியலுக்கு  இது வழி வகுக்கிறது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஒன்றிய மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு எதிராக இந்தியாவில் என்னென்ன தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. அதானிக்கும், அம்பானிக்கும் என்னென்ன உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா தொடர்ந்து ஏழை நாடாக இருந்து கொண்டிருப்பது ஏன்? பணக்காரர்கள் மட்டும் தொடர்ந்து மேலும் மேலும் பணக்காரர்களாக உருவாகுவது எப்படி? என்பதை  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், கேள்வி எழுப்பிக் க...

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீட காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SHYAM NEWS 12.11.2025   தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீட காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு        தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு மாதம்தோறும் அமாவாசை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு அபிஷேகம் நடைபெற்றது.           அதனைத் தொடர்ந்து மஹா காலபைவரவர் மலர்களாலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம் -மேயர் பெரியசாமி

ஷ்யாம் நியூஸ்  13.11.2025   தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம் -மேயர் பெரியசாமி   தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  இதில் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையை சம்பளத்தில் முழுவதுமாக பிடித்து விட்டதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விபரத்தை அறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன் உடனடியாக தூய்மை பணியாளர்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்டறிந்து அப்போது மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசுகையில் தனிப்பட்ட பகையை இதில் காட்ட வேண்டாம் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது உங்கள் கோரிக்கை என்ன என்று என்னிடம் சொல்லவும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தனிப்பட்ட பகையை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பத்து ரூபாய் ஐந்து ரூபாய் என்ற அவசியம் எனக்குத் தேவை கிடையாது தொழிலாளர்களை ...

மாப்பிள்ளையூரணி பகுதியில் குடிநீா் திட்ட பணிகளை கனிமொழி எம்.பி ஆய்வு

ஷ்யாம் நீயூஸ் 13.011.25  மாப்பிள்ளையூரணி பகுதியில் குடிநீா் திட்ட பணிகளை கனிமொழி எம்.பி ஆய்வு    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியத்தை சோ்ந்த மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகா் சுனாமி காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜல்ஜீவன் மிஷன் 2025 2026 திட்டத்தின்கீழ் ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் 363 குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு அதற்கான தண்ணீரை வழங்கும் நீரேற்றும் நிலையத்தினை அதிகாாிகளுடன் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோாிக்கைகளை கேட்டறிந்தாா்.         பின்னா் அதிகாாிகளுடன் பொதுமக்களுக்கு முக்கியமாக தேவையான குடிநீர் திட்டப்பணிகளை நல்லமுறையில் செயல்படுத்தி பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.       ஆய்வின் போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டா் இளம்பகவத் எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மாா்க்கன்டேயன், மேயா் ஜெகன் பொியசாமி, கூடுதல் கலெ...

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்

 ஷ்யாம் நீயூஸ் 28.09.25 தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்      தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஓபிஎஸ் அணி தொழிற்ச்சங்கமான ஜெ ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் ஏற்ப்பாட்டில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று டூவிபுரத்தில் உள்ள மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் முன்னிலையில் தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் மாரிமுத்து தலைவர் ஆனந்த் செயலாளர் சுபாஷ் வேளாங்கண்ணி பொருளாளர் பூண்டி செல்வம் உறுப்பினர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, மாரிமுத்து, இளையராஜா, இசக்கிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர்.      நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப்பாண்டியன் அனைவருக்கும் சீருடை வழங்கி சிறப்பான முறையில் பணியாற்றி அதிக உறுப்பினா்களை அதிமுகவில் இணைக்க வேண...

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா

 ஷ்யாம் நீயூஸ் 28.09.2025 தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா!   தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூைட சுமை தொழிலாளர்கள் முன்ேனற்றசங்க 35வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஞானசேகா் தலைமை வகித்தாா். சங்க செயலாளர் மாாிமுத்து, முன்னிலை வகித்தாா். பொருளாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினாா். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், தொழிலாளா்களுக்கு நினைவு பாிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். சுமையேற்றும் இறக்கும் தொழிலாளா்களுக்கு தனி நல வாாியம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின் போது காயம் ஏற்பட்டால் 50ஆயிரமும் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதே போல் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளனா்.       விழாவில் சங்க பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிா்வாகிகள் வக்கீல் முத்துலெட்சுமி, பாலசிங...

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 28.09.25  தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது. தூத்துக்குடி பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்  நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் ஆயுள் ஹோமம் நடைபெற்றது. அவரது பிறந்த தினம் இரண்டு வாரமாக சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தூய்மை பணியை மேற்கொள்ளுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோடி பிறந்த நட்சத்திர தின என்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக பிரிவு சார்பில் மோடியின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்பட்டது.     ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு தலைமையில் நடைபெற்றது.  விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய ஹோம நிகழ்ச்சியில் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, ஆயுசு ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றன. உலக நன்மைக்காக பல சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஜி எஸ் டி வரி குறைப்பு செய்தது உள்ளிட்ட நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவ...

பொய்யா் சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் தாக்கு

 ஷ்யாம் நீயூஸ் 27.09.2025 நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் அரசியல் பொய்யா் சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் தாக்கு  தூத்துக்குடி அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.ெசல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது        நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் அரசியல் வெளிச்சதிற்காக, மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை பத்திரிக்கையாளர் சந்திப்பில்  பிதற்றிக் கொண்டிருக்கும் மக்களால் அரசியல் பொய்யர் என அழைக்கப்படும் சீமானின் இன்றைய அரசியல் தலைவர்கள் குறித்த தரம் தாழ்ந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..    அரசியல் களத்தில் இல்லாத, மறைந்த  தலைவர்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் பங்களிப்புகளையும், மரபுகளையும் நினைவுகூர்வது அரசியல் கண்ணியத்தின் ஒரு பகுதி அதுவும் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோர் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரும் தலைவர்கள் சீமான் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும்  ...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் முன்னறிவிப்பு கடிதத்தை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன்.

 ஷ்யாம் நீயூஸ் 27.09.2025 டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் முன்னறிவிப்பு கடிதத்தை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன். காந்தி பிறந்த அக்டோபர் 2ல் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில தலைநகர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கம் போராடம் நடத்த உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் ஏ ஐ டி யு சி பணியாளர்கள் சங்கம் சார்பாக தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் முன்னறிவிப்பு கடிதத்தை ஏ ஐ டீ யூ சி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் வழங்கினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரை காலம்முறை ஊதியமோ பணி நிரந்தரமோ வழங்காமல் தற்காலிக பணியாளராகவே பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலம் முறை ஊதியம், பணி நிரந்தரம் ,இ.எஸ்.ஐ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் , பணி விதிகளை உருவாக்குதல், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை,  ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துதல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் உட்பட அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் போராடி வருகின்றன. இவற்றை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2 தேதி காந்தி ப...

புறம்போக்கு நிலங்களில் புகுந்து விளையாடும் தூத்துக்குடி வட்டாட்சியர்? கோடி கோடியா புரளும் ஊழல்!

 ஷ்யாம் நீயூஸ் 18.09.2205 புறம்போக்கு நிலங்களில் புகுந்து விளையாடும் தூத்துக்குடி வட்டாட்சியர்? கோடி கோடியா புரளும் ஊழல்! தூத்துக்குடியில் அரசு புறம்போக்கு இடத்தை அதிகாரிகள் துணையுடன்  ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா? என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடலோர மாவட்டமாகும். தூத்துக்குடியை தலைநகராக கொண்டு 1986ல் அக்டோபர் 26ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டு 38 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் என 6 தொகுதிகள் தற்போது உள்ளநிலையில்  முக்கியமாக முன்னணி பெற்ற தொழிற்சாலைகள், மின்உற்பத்தி நிலையங்கள், உப்பளங்கள், வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.  தூத்துக்குடி துறை...

தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது. சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!

ஷ்யாம் நீயூஸ் 09.09.2026  தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது.  சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு! தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு என்று தனி அலுவலகம் உள்ளதாக சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள குறிப்பில்.  மாவட்டத்தின் தலைநகராக இருந்து வரும் தூத்துக்குடி மையப் பகுதியில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த அலுவலகத்தில் தினசரி மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகவும்மற்றும் பட்டா தேவைகள் வாரிசு சான்று விண்ணப்பம் போன்ற இதர சான்றுகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை அனுகுகிறார்கள் பெரும்பாலும் விண்ணப்பங்களானது ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அந்த விண்ணப்பங்களை லஞ்சம் பெறுவதற்காகவும் ஆதாயம் அடைவதற்காகவும் வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு நிராகரிப்பு செய்கிறார்கள் மனுதாரர்களை நேரில் அழைத்து அது சரியில்லை இது சரியில்லை என அலையவிட்டு பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள பகுதியில் தனியார் கட்டிடத்தில் முன்னாள் துணை ஆட்சி...

தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய ஆவண படுகொலை!

 SHYAM NEWS 28.07.2025 தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய ஆவண படுகொலை! தூத்துக்குடி  ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின் இவர் தன் காதலியின் அழைப்பின் நம்பிக்கையில் நெல்லைக்கு சென்ற கவியின் காதலியின் தம்பி நேற்று (27.07.2025)ஆவண படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் சாதீய ஆணவத்தால்  கொல்லப்பட்ட மென் பொறியாளர் கவின், யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம். அப்பா சந்திரசேகர் நிலக்கிழார் (விவசாயி), அம்மா செல்வி  ஆசிரியை. தாத்தா செல்லத்துரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். ஆறுமுகமங்கலம் எனும் சிறிய தாமிரபரணி பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்ற கிராமம். அவர் பேசிப் பழகிய பெண்ணின் தாயும், தந்தையும் போலிஸ். பெண் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவர். பெண்ணின் தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9 ஆம் அணியில் சார்பு ஆய்வாளராகவும் பெண்ணின் தந்தை சரவணன்  ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணி சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்ற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

தூத்துக்குடியில் அட்டகாசம்!அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்; ஊழியர்களின் மண்டை உடைப்பு

 ஷ்யாம் நியூஸ்  21.04.2025 தூத்துக்குடியில் அட்டகாசம்அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்; ஊழியர்களின் மண்டை உடைப்பு - தூத்துக்குடியில் அட்டகாசம் தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிராஜாவின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தென் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் தூத்துக்குடிக்கு வருகை தந்து கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பி செல்லும் போது தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் டோல்கேட்டில் அவர்கள் சென்ற கார்களை டோல்கேட் பணியாளர்கள் நிறுத்தி டோல்கேட் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து கார்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து டோல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கி டோல்கேட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். டோல்கேட் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தாக்கி...

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள் மீது வழக்கு பதிவு!

ஷ்யாம் நீயூஸ் 18.04.2025  தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள்  மீது வழக்கு பதிவு ! தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சமத்துவ புரத்தைச் சார்ந்தவர் ஓட்டக்காரன் த/பெ தங்கராஜ் இவர் பாலிடெக்னியில் தொழிற்கல்வி படித்து அரசு வேலைக்காக காத்திருந்தார். இதனை அறிந்த அதே ஊரை சார்ந்த பத்திரகாளி க/ பெ முருகன் அவரை தொடர்பு கொண்டு தான் சென்னை தலைமை செயலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலக உதவி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக 2022ம் ஆண்டு ரூபாய்  5 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை நான்கு தவணையாக வங்கிக் கணக்கின் மூலமும், ஜிபே மூலமும் வாங்கி   ஏமாற்றியுள்ளனர். ஓட்டக்காரனிடம் போலியாக  பணி நியமண ஆணை   தாயார் செய்து அதன் நகலை ஓடக்காரனிடம் பத்திரகாளி   வழங்கியுள்ளார். மற்றும் ஒரிஜினல் ஆணை தலைமைச் செயலகத்தில் இருந்து விரைவில் வரும் என்று கூறி இந்த பண மோசடி வசூலில் பத்திரகாளி உட்பட குமரேசன் த/பெ பாண்டியன், விருதுநகரை சேர்ந்த தேவேந்திரன் த/பெ சுந்தரம் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு ஒ...

தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம் மேல் முறையிடு செய்ய ஆலோசனை !

  SHYAM NEWS 17.04.2025 தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம்  மேல் முறையிடு செய்ய ஆலோசனை ! தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை ரத்து செய்து, சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது. அதேபோல, திருச்செங்கோடு வட்டக்கொங்கு வேளாளர் சங்கம், தி புவர் எஜுகேஷனல் ஃபண்ட் ஆகியவற்றின் சார்பில் வெவ்வேறு கோரிக்கைகளோடு வேறு சில வழக்குகளும் தொடரப...