முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது. சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!

ஷ்யாம் நீயூஸ்

09.09.2026

 தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது.  சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!



தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு என்று தனி அலுவலகம் உள்ளதாக சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள குறிப்பில்.

 மாவட்டத்தின் தலைநகராக இருந்து வரும் தூத்துக்குடி மையப் பகுதியில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த அலுவலகத்தில் தினசரி மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகவும்மற்றும் பட்டா தேவைகள் வாரிசு சான்று விண்ணப்பம் போன்ற இதர சான்றுகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை அனுகுகிறார்கள்

பெரும்பாலும் விண்ணப்பங்களானது ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அந்த விண்ணப்பங்களை லஞ்சம் பெறுவதற்காகவும் ஆதாயம் அடைவதற்காகவும் வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு நிராகரிப்பு செய்கிறார்கள்

மனுதாரர்களை நேரில் அழைத்து அது சரியில்லை இது சரியில்லை என அலையவிட்டு பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள பகுதியில் தனியார் கட்டிடத்தில் முன்னாள் துணை ஆட்சியர் ஒருவர் விண்ணப்பங்களை பெற்று தருவதாக கூறி விண்ணப்பதாரர்களை அணுகி நூதன வகையில் லஞ்சத்தை பெறுகிறார்கள்

அண்மையில் பணி ஓய்வு பெற்றமுன்னாள் துணை ஆட்சியர் பிடித்துள்ள வாடகை கட்டிடத்தில் நாள்தோறும் இலஞ்ச பணம்வாங்கப்பட்டு வட்டாட்சியர் முரளிதரன் உட்பட பல அதிகாரிகள் அலுவலகம் நேரம் முடிந்த பின்னர் பங்கு பிரித்து கொள்வது தினசரி நடந்து வருகிறது

வட்டாட்சியர்  முரளிதரன்  இதுவரையிலும் எத்தனை விண்ணப்பங்களை வேண்டுமென்றே நிராகரிப்பு செய்துள்ளார் என்பதை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மட்டும் நேர்மையாக நடந்து கொண்டால் லஞ்சம் ஒழிந்து விடப் போவதில்லை  தனக்கு கீழ் பணிபுரியும் இது போன்ற நியாயமற்ற வகையில் மக்களிடம் லஞ்சம் பெறும் நபர்களை கண்டறிந்து அவர்களை கூர்நோக்குப் பணியிடத்திலிருந்து பணி மாறுதல் செய்து நேர்மையான வட்டாட்சியரை தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியராக நியமித்தால் மட்டுமே லஞ்சம் பெறுவது பெருமளவு  குறையும் என்பதால் மாவட்டத்தின் தலைநகரிலேயே லஞ்சம் தலைவிரித்து ஆடுவது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு தலைகுனிவாகும் என தெரிவித்துள்ளார் இது தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இதுபோல் முன்னாள் வட்டாட்சியர் ஆக இருந்தவர்களும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் பட்டா மாறுதல்களில் சரமாரியாக ஊழல் நடைபெற்றுளளது. இந்த பட்டா மாறுதல்களில் கிராம நத்தம் பகுதியில் குடியிருந்து வரும் ஏழைகள் பலர் இன்றும் குடியிருந்து வரும் நத்தம் புறம்போக்கு நிலம் தங்கள் பெயரில் பட்டதாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் கிராம நிர்வாக அதிகாரிகள் பணம் எனும் ஊழல் அரக்கனுக்கு அடிமையாகி அவர்களுக்கு தெரியாமையே பல பட்டாக்களை பெயர் மாற்றம் செய்து கோல்மால் செய்துள்ளனர் இவை அனைத்துமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்க்க நேர்ந்தால் பூதம் போல் நிறைய போலி பட்டா மாறுதல்கள் வெளியே தெரியவரும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் ஒரு விமோசனம் கிடைக்கும் என்று பொதுமக்கள் தாமாகவே தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...