முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்

  SHYAM NEWS

13.11.2025

பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்,




      பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன ரோல்? ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்று பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி கேட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது தரம் தாழ்ந்த அரசியலுக்கு  இது வழி வகுக்கிறது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஒன்றிய மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு எதிராக இந்தியாவில் என்னென்ன தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. அதானிக்கும், அம்பானிக்கும் என்னென்ன உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா தொடர்ந்து ஏழை நாடாக இருந்து கொண்டிருப்பது ஏன்? பணக்காரர்கள் மட்டும் தொடர்ந்து மேலும் மேலும் பணக்காரர்களாக உருவாகுவது எப்படி? என்பதை  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் ராகுல்காந்தியை ஏதாவது ஒரு வலையில் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, இன்று குண்டு வெடிப்புக்கு காரணம் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் தான் என்பது சொல்வது போல் தெரிகிறது. இது ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் ஏதோ திட்டமிட்ட சதியை உருவாக்குவது போல் தெரிகிறது. டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான மக்களுக்கு உலகமே அனுதாபம் தெரிவித்து, தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏதோ ஒரு வன்ம நோக்கத்தோடு இதை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியையும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த பொய்யான கருத்தை கூறிய பொன் ராதாகிருஷ்ணன் இதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழக்கு தொடரப்படும். மேலும் தூத்துக்குடிக்கு பொன் ராதாகிருஷ்ணன் வருகை தரும் போது அவருக்கு எதிராக மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம். என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...