முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள் மீது வழக்கு பதிவு!

ஷ்யாம் நீயூஸ்

18.04.2025

 தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள்  மீது வழக்கு பதிவு !

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சமத்துவ புரத்தைச் சார்ந்தவர் ஓட்டக்காரன் த/பெ தங்கராஜ் இவர் பாலிடெக்னியில் தொழிற்கல்வி படித்து அரசு வேலைக்காக காத்திருந்தார். இதனை அறிந்த அதே ஊரை சார்ந்த பத்திரகாளி க/ பெ முருகன் அவரை தொடர்பு கொண்டு தான் சென்னை தலைமை செயலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலக உதவி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக 2022ம் ஆண்டு ரூபாய்  5 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை நான்கு தவணையாக வங்கிக் கணக்கின் மூலமும், ஜிபே மூலமும் வாங்கி   ஏமாற்றியுள்ளனர். ஓட்டக்காரனிடம் போலியாக  பணி நியமண ஆணை   தாயார் செய்து அதன் நகலை ஓடக்காரனிடம் பத்திரகாளி   வழங்கியுள்ளார். மற்றும் ஒரிஜினல் ஆணை தலைமைச் செயலகத்தில் இருந்து விரைவில் வரும் என்று கூறி இந்த பண மோசடி வசூலில் பத்திரகாளி உட்பட குமரேசன் த/பெ பாண்டியன், விருதுநகரை சேர்ந்த தேவேந்திரன் த/பெ சுந்தரம் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு ஒரிஜினல் பணி நியமன ஆணை வராததை கண்டு ஏமாந்த  ஓட்டக்காரன் பணத்தை திருப்பித் தருமாறு பத்திரகாளியிடம் கேட்டுள்ளார் இதில் ஆத்திரமடைந்த பத்திரகாளி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்ததோடு பத்திரகாளி அவரது கணவர்  முருகன் இவர்களது மகன்கள் சிவசங்கரபாபு, வைஇந்திரஅம்ரிஸ் ஆகியோர் ஓட்டக்காரனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஓட்டக்காரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இவரது புகார் குறித்து காவல்துறைனர் நடவடிக்கை எடுக்காததால் ஓட்டக்காரன் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார் . இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுபடி  6 நபர்கள் மீதும்  தூத்துக்குடி குற்ற பிரிவு காவல் துறையினர்  குற்ற  எண் 16/2025 U/s 406,420,294(b)506(i)ipc  வழக்கு பதிவு செய்து  தேடி வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...