முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை..

ஷ்யாம் நீயூஸ்

05.12.25

ஊர் தலைவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை.


ஊர் தலைவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட இளம் சிறார் நீதி குழுமம்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா(45). இவர் கல்லூரணி ஊர்த்தலைவராக இருந்துள்ளார். கடந்த 12.08.2008 அன்று கல்லூரணி ஊரில் உள்ள காளியம்மன் கோவில் கொடைவிழாவின் போது, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன் என்ற குச்சிமுருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனை சுப்பையா கண்டித்து உள்ளார்.  தொடர்ந்து ஊர் கூட்டத்திலும் 3 பேரையும் சுப்பையா கண்டித்து உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், கடந்த 14.08.2008 அன்று சுப்பையா, அவரது மகன் ராஜாவுடன் குளத்தூர்-கல்லூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் முருகன், முனியசாமி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் 17 வயது சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட  இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வழக்கு  விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் எஸ்.பாக்கியராஜ், உறுப்பினர்கள் சரவணன், உமாதேவி ஆகியோர், குற்றம் சாட்டப்பட்ட இளஞ்சிறாருக்கு  நூதன தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி ஊர்தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய  இளஞ்சிறார் 3 ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் தினமும் காலை 8 மணி முதல் 4 மணி வரை சமுதாய பணியாற்ற வேண்டும்.  இவரது வருகையை உறைவிட மருத்துவ அலுவலர் கண்காணித்து மாதம் தோறும் இளம்சிறார் நீதிக்குழுமத்தில் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், மேலும் ரூ.500 அபராதமும் விதித்து  உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் உதவு குற்றவியல் வழக்கறிஞர்  முருகபெருமாள் ஆஜர் ஆனார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...