முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது.

 ஷ்யாம் நீயூஸ்

01.12.25

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது.  டாஸ்மாக் பணியாளர் சங்கம் கூட்டமைப்பு கோரிக்கை! 

தூத்துக்குடி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெற வேண்டும் என்ற திட்டத்தினை ஏற்க மறுத்து தூத்துக்குடியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கம்  கூட்டமைப்பு சார்பாக மாவட்ட மேலாளார் ஐயப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் 

 நிர்வாகத்தால் நியமிக்கப்படும் காலி பாட்டில் எடுக்கும் ஏஜென்ட், பார் ஒப்பந்ததாரர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் காலி பாட்டில் சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் கடை பணியாளர்களை எந்த நிர்பந்தமும் செய்யக்கூடாது. 

காலி பாட்டில் திரும்ப பெரும் ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளர் அந்தந்த கடை எண் உள்ள ஸ்டிக்கர்களை கடை பணியாளர்களிடம் ஒப்படைத்து  பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.

பார் ஒப்பந்ததாரர் அன்றைய தினத்தில் வழங்கும் ஸ்டிக்கருக்கான தொகையினை மறுநாள் கடை திறந்த பின்பு வழங்கப்படும்.

காலி பாட்டிலிக்கான ரூபாயை ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். 

பார் உரிமையாளர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஆள் நியமித்து வேலை செய்தால் அதற்கான ஊதியத்தை கடைப்பணியாளர்களிடம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. 

பார் இல்லாத கடைகளுக்கு ஒப்பந்ததாரர்களே ஆள் நியமித்து பாட்டிலை பெற்றுக் கொள்ள வேண்டும் 

ஆள் பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு பணியாளர்களை நியமித்து பணி நிறைவு செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை 

வலியுறுத்தி மனு அளித்தனர். கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மாவட்டம் மேலாளர் காலி பாட்டில் திரும்ப வரும் திட்டத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும் உறுதி அளித்தார். ஆனால் தொழில் செய்ய கூட்டமைப்பு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நாளை முதல் (02.12.25) காலி பாட்டில் திரும்பப் பெறும். திட்டம் நடைபெற உள்ளதாகவும் மாவட்ட மேலாளர் கூட்டத்தில் தெரிவித்தார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...