முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வல்லநாடு தாமிரபரணி நீறேற்று நிலயத்தில் நேரில் ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.

 ஷ்யாம் நீயூஸ்

20.05.2023

தூத்துக்குடி நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வல்லநாடு தாமிரபரணி நீறேற்று நிலயத்தில் நேரில் ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மாநகர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில், வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு ஒரு சில இடங்களில் தினசரியும், சில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலத்திலும் முடிந்தளவு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது வரை மழை இல்லாததால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் ஒரு நாள் தாமதமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 62 எம்எல்டி அளவு தண்ணீர் தேவையாகும். ஆனால் தற்போது 20 எம்எல்டி தண்ணீர் தான் கிடைக்கிறது. இது குறித்து வல்லநாடு நீரேற்று நிலையம், உரைகிணறு ஆகியவறில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் நீர் பெறுவதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...