முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகர மக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ்

20.05.2023

தூத்துக்குடி மாநகர மக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.



    தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றிலிருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியிலிருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

     இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் கடந்த வருடம் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையிலும் மக்கள் பாதிக்காத வகையில் மாநகர பகுதியில் உள்ள 31 குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றப்பட்டு சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் குடிதண்ணீர் முறைப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தென்கிழக்கு பருவமழை ஆரம்பமாகவுள்ளதால் அதுவரை பொதுமக்கள் அனைவரும் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன்பின்பு மழை காலம் தொடங்கிபின்பு இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாது. இந்நிலையில் வல்லநாடு, கலியாவூர் ஆகிய பகுதிகள் மட்டுமன்றி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


    மாநகர பகுதி மக்களுக்கு சில தினங்களுக்கு ஓருமுறை மட்டும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதை மேலும் முறைப்படுத்தி தினசரி வழங்குவது சம்மந்தமாக நீர்வரத்து குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பராமரிப்பு பணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் முறையாக இயக்கப்படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு,  கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுபவர்களை உங்களுக்கு கொடுத்திருப்பது பதவி அல்ல மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பு  என்று கூறியது மட்டுமின்றி எல்லோரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதனடிப்படையில் மக்கள் பணியை தொடர்ந்து செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டு வந்துள்ளோம். பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை 50 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் மேலும் பல்வேறு வளர்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் தன்னார்வலர்களும் தனது பங்களிப்பின் மூலம் மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவலாம் எந்த குறைகளாக இருந்தாலும் 24 மணி நேரமும் என்னிடமும் ஏற்கனவே கொடுக்கப்பட்டு மாநகராட்சி குறைதீர்க்கும் எண்ணிலும்  தெரிவிக்கலாம் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...