முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் காவல்நிலையம் முற்றுகை !டி எஸ் பி பிரகாஷ் சாமர்த்தியத்தால் மாவட்ட எஸ் பி அலுவலகம் தப்பியது !

SHYAM NEWS 
16.02.2020

தூத்துக்குடியில் காவல்நிலையம்  முற்றுகை !டி எஸ் பி பிரகாஷ் சாமர்த்தியத்தால் மாவட்ட எஸ் பி அலுவலகம்  தப்பியது !




சி ஏ ஏ ,என் ஆர் சி க்கு எதிராக நாடுமுழுவதும்பொதுமக்கள் ,அரசியல் கட்சிகள் மூலம்  போராட்டம் நடைபெற்று வருகிறது .இதன் தொடர்ச்சியாக  நேற்றைய முன்தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல்த்துறை தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
காவல்நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது .

தூத்துக்குடியில் நேற்று (15.02.2020) காலை 11 மணி அளவில்  சி ஏ ஏ ,என் ஆர் சி எதிராக போராடிய  பொதுமக்களை   காவல்த்துறை தடியடி நடத்தியதை கண்டித்து  தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பளார் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் நினைத்தனர் . ஆனால் அதை முன்கூட்டியே அறிந்த தூத்துக்குடி டி எஸ் பி பிரகாஷ் போராட்ட தலைவர்களை அழைத்து பேசி மாவட்ட கண்காணிப்பளார் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தை கைவிட செய்தார் .பின்னர் தூத்துக்குடியில் தெற்கு காவல்நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது .முற்றுகை போராட்டத்தில் சிறு வன்முறைகூட  நடக்கவில்லை தேசிய கொடியை ஏந்திய மக்கள் சி ஏ ஏ ,என் ஆர் சி  சட்டத்தை திருப்ப பெறவேண்டும் எனவும் தடியடி நடத்திய காவலர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும் எனவும் கோஷமிட்டனர் .போராட்டத்திற்கு டி எஸ் பி பிரகாஷ் சிறந்த பாதுகாப்பு வழங்கி இருந்தார் .போராட்டம் முடிந்தவுடன் போராட்டம் நடந்த இடத்தை இளைஞர்கள் சுத்தம் செய்தனர் .டி எஸ் பி பிரகாஷின் சாமர்த்தியமான செயலால் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பளார் முற்றுகை போராட்டம் தப்பியது .இந்த சாமர்த்திய செயலால் டி எஸ் பி பிரகாஷை மக்கள் பாராட்டி வருகின்றனர் . இதுபோன்ற சாமர்த்திய செயலை அப்போது இருந்த அதிகாரிகள் செய்திருந்தால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் தடுக்கப்பட்டிருக்கும் 13 க்கும் மேற்பட்ட உயிர் பலி தடுக்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறினர் .சி ஏ ஏ ,என் ஆர் சிக்கு எதிராக மற்றும் ஒரு போராட்டம் வி வி டி  சிக்னல் அருகில் அன்று மாலை நடைபெற்றது இதில் சி பி ஐ கட்சியை சார்ந்த கனகராஜ் கலந்துகொண்டார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...