முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 30 லட்சம் ஊழல் !கீதா ஜீவன் M L A நிதியில் ஊழல் செய்த PWD அதிகாரிகள் !

தூத்துக்குடி கீதா ஜீவன் M L A  நிதியில் 30லட்சம் ஊழல் செய்த PWD அதிகாரிகள் !







தூத்துக்குடி பொதுப்பணித்துறை நீர்வளம் கோரம்பள்ளம் ஆறு வடிநில அலுவலகத்தில் பணிபுரியும் செயற் பொறியாளர் கங்காதரன் துணை செயற்பொறியாளர் சங்கர் உதவி பொறியாளர் உருவாட்டி மற்றும் ஆதிநாதன் ஆகியோர் கட்டிடம் கட்டாமல் பணம் கையாடல் செய்தாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

கடற்கரை பாதுகாப்பு பணிக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியது .இதில் துண்டில் வளைவு அமைப்பது முக்கிய பணியாகும் வீரபாண்டிய பட்டினம் கல்லாமொழி பெரியத்தாளை ஆகிய பகுதிகளில் 45 கோடி ரூபாய்  செலவில் துண்டில் வளைவு அமைக்கப்பட்டது .மீதி இருக்கும் பணத்தை எப்படி சுருட்டலாம் என்று திட்டம் போட்டதில் மாட்டிக்கொண்டனர் .தூத்துக்குடி பொதுப்பணித்துறை வளாகத்திற்குள் சுமார் 150 வருட பாரம்பரியம் மிக்க கட்டிடத்தை பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தது .இந்த கடிதத்தை கட்டிடம் மற்றும் பராமரிப்பு அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் இடித்துள்ளனர் .
.பத்து லஞ்சம் ரூபாய் வரை செயற் பொறியாளர் அதிகாரம் படைத்தவர்
இந்த அதிகாரம் படைத்த செயற்பொறியாளர் கங்காதரன் தலைமை பத்து லஞ்சம் ரூபாய்   என்கிற அதிகாரத்தை வைத்து 45 லட்சம் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை நான்கு பத்து லட்சமாக ஒரு ஐந்து  லட்சமாகவும் பிரித்து தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்க்கு பணியை கொடுத்து கட்டிடம் காட்டுவதுபோல் சில கட்டுமான பொருட்களை வாங்கிவைத்து விட்டு மீதி பணத்தை கட்டிடம் கட்டி விட்டதாக கணக்கு எழுதி பணத்தை சுருட்டி  விட்டதாக தெரிகிறது .பத்து லட்சத்திற்குமேல் உள்ள பணிக்கு கண்காணிப்பு பொறியாளரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு பத்து பத்து லட்சமாக பிரித்து வேலை செய்ததுபோல் ஏமாற்றி பணம் கையாடல் செய்ததாக தெரிகிறது என்றும். கடந்த 2015 வடகிழக்கு பருவமழை வெள்ளச்சேத பணியின் போதும் நடக்காத வேலைக்கெல்லாம் நடந்தாக பத்து பத்து லட்சமாக பத்து கோடிக்கு பில் எடுக்கபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர் ஆகவே இந்த அதிகாரிகள் செய்த அணைத்து வேலைகளையும் மீண்டும் வேறு அதிகாரிகள் வைத்து ஆய்வூ செய்திட விடும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் . நாம் இது தொடர்பாக உதவி பொறியாளர் பாஸிடீன் வினுவை  தொடர்பு கொண்டபோது தகவல் தர மறுத்து விட்டார். 


தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2108 ஏக்கர் பரப்பளவு உள்ள மிக பெரிய குளம் ஆகும் .ஏரல் வடக்காலின் கடைசிக்குளம் .மற்றும் மணியாச்சி ஒட்டநத்தம் கடம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் காட்டு ஆற்று மழை நீர்களும் இந்த குளத்திற்கு வரும் .குளத்தில் தேங்கி மீதம் உள்ள நீர்கள் உப்பு ஆற்று ஓடை வழியாக கடலுக்கு செல்லும் . இந்த நிலையில் இந்த ஆண்டு (2018) வீரநாயகன்தட்டு கிராமம் அருகில் வரும் வெள்ளத்தை தடுக்க தூத்துக்குடி எம் எல் ஏ திருமதி கீதா ஜீவன்  நிதியில் 30லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது .

இந்த தடுப்பணை பொதுப்பணித்துறை நீர்வளம் ஏ இ பாஸ்டின் வினு தலைமையின் கீழ் பணி  நடைபெற்றது .

இவரின் கீழ் நடைபெற்ற அணைத்து பணிகளும் தரம் இல்லாமல்தான் இருந்தது இவரின் கீழ் கட்டிய அணைத்து நீர் நிலை மடைகளும் சிமெண்டால் கட்டப்பட்ட வாய்க்கால்களும் உடைந்து போய்விட்டது . பாஸ்டின் வினு கட்டிய அணைத்து வேலைகளிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ள அளவுகளிலும் இல்லை(மண்ணிற்குள் இருக்கவேண்டிய 1.80 மீட்டர் அளவு 1 மீட்டரிலும் கட்டி விட்டு தரைக்கு மேல் உள்ள அளவான .45 ஐ மட்டும் சரியாக காண்பித்து 42 மீட்டர் நீள அளவில் 3 சுவர் ) .மண்ணிற்குள் ஒரு அளவு தந்தரைக்குமேல் ஒரு அளவு இருக்கிறது . இதனால் அரசாங்கத்திற்கு மிக பெரிய நஷ்டம் .கீதாஜீவன் எம் எல் ஏ ஒதுக்கி கொடுத்த 30 லட்சத்தையும் மூன்று பத்து லட்சமாக பிரித்து மேலதிகாரியிடம் அனுமதி வாங்காமல் இவர்களின் கட்டுப்பாட்டில் வருமாறு செயற் பொறியாளர் கங்காதரன் பார்த்து கொண்டார் .தடுப்பு அணை என்று சொல்லிவிட்டு பெயருக்கு சிமென்ட்டுடன் அதில் வானம் தோண்டிய சிப்பி மண்ணை கலந்து மூன்று பிரிவுகளாக கட்டி உள்ளனர் .இது சம்பந்தமாக திருமதி தூத்துக்குடி எம் எல் ஏ கீதாஜீவனிடம்  கேட்டபோது 
பொதுப்பணிதுறை அதிகாரிகள் வீரநாயகன்தட்டு அருகில் கரை உடைந்து விடும் நிலையில் இருக்கிறது தடுப்பணை கட்டி அதை சரிசெய்வதற்கு ரூபாய் 30 லட்சம் எம் எல் ஏ நிதியில் ஒதுக்கி தரவேண்டும் என கேட்டனர் அதன்படி  பணம் கொடுக்கப்பட்டது அதோடு என்வேலை முடிந்து விட்டது அதை கண்காணிப்பது என்வேலை இல்லை தவறு நடந்திருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கிறேன் என்று கூறினார் .நாம் மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக கேட்டபோது அதுபோன்ற தகவல் ஏதும் வரவில்லை என்று தெரிவித்தார் .
ஆனால் பொதுமக்கள் கூறுகையில் அதிமு க  ஆட்சி  நடக்கும் பொது தி மு க எம் எல் ஏ நிதியில் ஊழல் நடக்கிறது என்றால் தி மு க ஆட்சி நடந்தால் என்னவாகும் என்று வருத்தம் தெரிவித்தனர் .மாவட்ட ஆட்சி தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டனர் .
கட்டிய தடுப்பணையை பார்த்தபோது பொறியியல் படித்தவர் கட்டியது போல் இல்லை விளையாட்டு பிள்ளைகள் வீடுகட்டி விளையாடுவதுபோல் உள்ளது.
படம்பிடித்ததை அறிந்த ஏ இ விணு இரவோடு இரவாக தடயத்தை அழிக்க கான்கிரீட் சுவரின் மேல் சிமெண்டு பூசுதல் செய்து வருகிறார்.
கீதாஜீவன்MLA மீது பொதுவாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. அவரின் புகழை குறைக்கும் வகையில் செயல்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா!
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்கள் கருத்து.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...