முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோரத்தாண்டவமாடிய கஜ புயல் - கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்கள்!

SHYAM NEWS

19 நவம்பர் 2018


கோரத்தாண்டவமாடிய கஜ புயல் - கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்கள்


கோரத்தாண்டவமாடிய கஜ புயல் - கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்கள்
வங்கக் கடலில் உருவான கஜ புயல் நாகையில் கரையை கடந்தது. 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் கஜ கோரதாண்டவம் ஆடியது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. காற்றின் வேகம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் இரவு 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
புயல் கரையை கடந்தபோது கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தன. நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் காற்று பலமாக வீசியது.
சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த தென்னந்தோப்புகள் சேதமானது. இவற்றில் 1 லட்சம் தென்னைமரங்கள் சாய்ந்தது. கடலோர கிராமங்களில் கடந்த 15ஆம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் கடல் நீர் கிராமங்களில் புகுந்ததால் குடியிருப்பு வீடுகள் தண்ணீர் சூழ்ந்தது. 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் இருளில் முழ்கிய மக்கள் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் மற்றும் கொசு தொல்லையால் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். மேலும் கடல் நீர் உட்புகுந்ததால் சுகாதார நீர் கேடு ஏற்ப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி இரவு கஜ புயல் கரையயை கடக்கும் போது அப்பகுதி குடிசை வீடுகள் காற்றில் பறந்தது சில வீடுகள் இடிந்து விழுந்தது இதனால் இரவு தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்களது உயிர்களை காப்பற்றி கொள்ள பச்சிளங் குழந்தைகளுடன் உடமைகளை விட்டு விட்டு வெளியே தப்பி வந்துள்ளனர்.
கோரத்தாண்டவமாடிய கஜ புயல் - கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்கள்
இது குறித்து பிபிசியிடம் தமிழிடம் பேசிய அழகு முத்து, "விடியற்காலையில் தீடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது. வீட்டீன் கதவை திறந்து வெளியில் செல்லவும் முடியவில்லை. பெரும்பாடுபட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தேன். இரண்டு நாளாக பட்டினி கிடந்தோம்" என்கிறார்.
மேலும், "உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்தோம். இப்போது உடமைகள் ஏதும் இன்றி மாற்று துணியும் இன்றி துயரப்படுகிறோம்" என்றார் அவர்.
  • "இந்த புயல் இந்த பக்கம் வராதுன்னு சொன்னாங்க நாங்க ரொம்ப தைரியமா இருந்தோம் ஆனால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தினால் எங்கள் காலனியில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து போனது. மூன்று நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் ஏதுமின்றி இருக்கிறோம் என்கிறார்" அறிவுமதி.
வெள்ளத்தில் பாதித்த அறிவுமதி மற்றும் அவரின் பிள்ளைகளை அக்கம்பக்கத்தினர் கயிறு கொண்டு இழுத்து வெளியே மீட்டுள்ளனர்.
கோரத்தாண்டவமாடிய கஜ புயல் - கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்கள்
"இந்த புயல் வந்ததிலிருந்து இந்த பகுதியில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர். கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமாயின. இதனால் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
நாங்கள் பத்து நாட்களாக கடைகளை திறக்காமல் உள்ளோம். இதனால் எங்களுக்கும் வருமானம் இல்லை" என்கிறார் அப்பகுதி வர்த்தக சங்க தலைவர் காதர்பாட்ஷா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...