ஷியாம் நியூஸ்
30.11.2018
தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது!
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாயர்புரத்தில் அநேக கல்லூரிகளும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இவைகளுக்கு ஆண்டுதோறும் சுகாதாரச் சான்றிதழ் தேவைப்படுகிறது.அனைத்து நிறுவனங்களிலும் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சுகாதார சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சாயர்புரம் Dr.G.U.போப் கல்வியியல் கல்லூரியில் அங்கீகாரம் தொடர்பாக சுகாதார சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ஆழ்வாரப்பன் அவர்களால் வழங்கப்பட வேண்டும் .அவர் சான்றிதழை வழங்குவதற்கு ₹65000 லஞ்சமாக பேரம் பேசி,இறுதியில் ₹25000 க்கு சான்றிதழ் தருவதாக, கல்லூரியில் வேலை செய்யும் திரு.I.ஜெயக்குமார் அவர்களிடம் உறுதியளித்தார். கல்லூரியில் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதால் திரு.ஜெயக்குமார் அவர்கள் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார் .இதனால் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஹெக்டேர் அவர்கள் வழக்கு பதிவு செய்து,போப் கல்வியியல் கல்லூரியின் முன்புற சாலையில் வைத்து திரு.ஆழ்வாரப்பன் அவர்களிடம் ₹25000 வழங்கும்போது அங்கு மாறு வேடத்தில் ரோட்டோரத்தில் உள்ள புற்களை வெட்டுவது போல் மறைந்திருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது தனிப்படையினர்,திரு.ஆழ்வாரப்பன் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் மீதும் ,கல்லூரிகளின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்ட திரு.ஜெயக்குமார் அவர்களை கல்லூரிகளின் சார்பாக பாராட்டி வருகின்றனர்.
30.11.2018
தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது!
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாயர்புரத்தில் அநேக கல்லூரிகளும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இவைகளுக்கு ஆண்டுதோறும் சுகாதாரச் சான்றிதழ் தேவைப்படுகிறது.அனைத்து நிறுவனங்களிலும் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சுகாதார சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சாயர்புரம் Dr.G.U.போப் கல்வியியல் கல்லூரியில் அங்கீகாரம் தொடர்பாக சுகாதார சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ஆழ்வாரப்பன் அவர்களால் வழங்கப்பட வேண்டும் .அவர் சான்றிதழை வழங்குவதற்கு ₹65000 லஞ்சமாக பேரம் பேசி,இறுதியில் ₹25000 க்கு சான்றிதழ் தருவதாக, கல்லூரியில் வேலை செய்யும் திரு.I.ஜெயக்குமார் அவர்களிடம் உறுதியளித்தார். கல்லூரியில் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதால் திரு.ஜெயக்குமார் அவர்கள் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார் .இதனால் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஹெக்டேர் அவர்கள் வழக்கு பதிவு செய்து,போப் கல்வியியல் கல்லூரியின் முன்புற சாலையில் வைத்து திரு.ஆழ்வாரப்பன் அவர்களிடம் ₹25000 வழங்கும்போது அங்கு மாறு வேடத்தில் ரோட்டோரத்தில் உள்ள புற்களை வெட்டுவது போல் மறைந்திருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது தனிப்படையினர்,திரு.ஆழ்வாரப்பன் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் மீதும் ,கல்லூரிகளின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்ட திரு.ஜெயக்குமார் அவர்களை கல்லூரிகளின் சார்பாக பாராட்டி வருகின்றனர்.