முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேற்று டைவர்ஸ் இன்று மனைவிக்கு வெட்டு நண்பருடன் கணவர் வெறிச்செயல்.தூத்துக்குடியில் பரபரப்பு!

ஷ்யாம் நீயூஸ் 30.01.2024  நேற்று டைவர்ஸ் இன்று மனைவிக்கு வெட்டு நண்பருடன் கணவர் வெறிச்செயல்.தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடி  புதுக்கோட்டை அருகே உள்ள கிராமம்  அல்லிக்குளத்தை சேர்ந்தவர் அமராவதி (24) இவருக்கும் திருவை குண்டத்தைச் சேர்ந்த குணாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து  தனது தாய் வீடான அல்லி குளத்தில் வசித்து வந்துள்ளார். நேற்று இருவருக்கும் டைவர்ஸ் ஆர்டர் வந்த நிலையில் நேற்று அவரின் கணவர் பிள்ளைகளை அழைத்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய அமராவதியை  கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அவரது கணவர் மற்றும் இருவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இவர்களுக்கு  ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவருக்க...

மோடி உயர் பதவியில் இருந்தாலும் இழி மகன் இழி மகன் தான்-தூத்துக்குடியில் சீமான் அதிரடி பேட்டி!

 ஷ்யாம் நீயூஸ் 28.01.2025 மோடி உயர் பதவியில் இருந்தாலும் இழி மகன் இழி மகன் தான்-தூத்துக்குடியில் சீமான் அதிரடி பேட்டி! நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி சத்யா ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்துகொண்டனர். மற்றும் கோவில்பட்டியில் நடைபெறும்   பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி வருகை தந்தார். நிர்வாகிகள் சந்திப்பு முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது. நாம் தமிழர் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை  தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார் . தமிழகம்- பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20 :20 ஆண் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.வரும் பிப்ரவரி மாதத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். மற்றும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் வெளிநாடு செல்வது அவருடைய தனிப்பட்ட பயணம் நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இந்தியா கூட்டணியிலிருந்து மம்தா அரவிந்த் கெஜ்ரிவா...

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 27.01.2024 தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.      தூத்துக்குடி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.       திட்டத்தின் படி மக்கள் அதிகமாக பயன் பெறும் வகையில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மின்;சாரத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, காவல்துறை, மருத்துவதுறை உள்பட அத்தியாவசிய துறைகளின் அதிகாரிகள், ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மழை வெள்ள பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாம் நடைபெறாமல் இருந்த நிலையில்...

சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சந்திப்பு

 ஷ்யாம் நீயூஸ் 24.01.2024 சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!    தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை நிமித்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் இருவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி நிலவரமும் தற்போது மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கள நிலவரம் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முழுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகத்திற்கும் கட்சியை வளர்ப்பதற்கும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி பணியாற்றுபவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும். என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  வட்டச் செயலாளர் துரைசிங் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்ப...

குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு !

 தூத்துக்குடி ஷ்யாம் நீயூஸ் 23.01.2024  குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு ! சுதந்திரப்  போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி தியாகம் குறித்து கவிதை எழுதிய தூத்துக்குடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி டிவைனாவிற்கு வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிப்பதுடன் குடியரசு தின அணிவகுப்பை மத்திய அரசு செலவில் விமானத்தில் சென்று பெற்றோருடன்  பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கௌரவித்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் வீராங்கனை நினைவு கூறும் வகையிலான கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்தியது. இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த  ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் கவிதை பிரிவில் தூத்துக்குடி பி.எம்.சி பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டிவைனா சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் வீரம் மற்றும் தியாகத்தை...

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு! ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

ஷ்யாம் நீயூஸ் 23.01.2024 தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு! ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு தமிழ் மொழியை ஆட்சி மொழியாக 27-12-1956 ஆம்  சட்டம் இயற்றப்பட்டது இதை ஆண்டுதோறும் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ் ஆட்சி மொழி வார விழா தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை  துணை இயக்குனர் கனக லட்சுமி  தலைமையில் தூத்துக்குடி கோட்டாட்சிய தலைவர் மனோகரன் கொடி அசைத்து   பேரணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நகரின் முக்கிய வீதியில் வழியாக இந்த பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் தூத்துக்குடி நகரில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரியில் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு தமிழ்  மொழி குறித்த பதாகைகளை ஏந...

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு.

ஷ்யாம் நீயூஸ் 22.01.2024  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டு நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடி ஈட்டியுள்ளது . ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளதாக மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.  547 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்...

தூத்துக்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கு பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் தூத்துக்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கு பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு   தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதிகளில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போல்பேட்டை - டிஎம்சி காலனி பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.      மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் 1 கோடி காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

 ஷ்யாம் நீயூஸ் 19.01.2024 சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் 1 கோடி காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.     தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி முதல்மாநில மாநாடு அப்போது மாநில செயலாளராக இருந்த முக.ஸ்டாலின் தலைமையில் 2007ல் நெல்லையில் நடைபெற்றது. அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.      மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உடனிருந்தனர்.

பொங்கல் விளையாட்டு விழா 5 கி.மி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வாலிபருக்கு முதல் பரிசு

 ஷ்யாம் நீயூஸ் 18.01.2024 பொங்கல் விளையாட்டு விழா 5 கி.மி  ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வாலிபருக்கு முதல்  பரிசு தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் தமிழக கிராமங்களில் பொங்கலுக்கு அடுத்த நாள் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் காலான்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல்  விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வாலிபர்களுக்கு கிராமம் சார்பாக விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுகளில் மிகச் சிறந்த போட்டியாக 5 கிலோமீட்டர் ஓட்டபந்தயமும் . 5கி.மீ சைக்கிளில் ரேஸும் நடைபெற்று. ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசை  காலான்கரையை சார்ந்த  கன்னி ஈஸ்வரனும் சைக்கிள் ரேஸ்ஸின் முதல் பரிசை முனியசாமியும் தட்டி சென்றனர். ஊர் தலைவர் பொன்னுலிங்கம் தலைமையில் விழா கமிட்டி சார்பாக  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஞானக்கண். வார்டு உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் சமுக ஆர்வலர் ஐயப்பன் ஆகியோ...

தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 14.01.20224 தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு தூத்துக்குடி மூணாவது சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பித்தார்.  விழாவில் வட்டச் செயலாளர் மூக்கையா தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, ஜெயசீலி, விஜயலட்சுமி, சரவணகுமார், ராஜதுரை, பட்சிராஜன், மாமன்ற உறுப்பினரும் பகுதி செயலருமான ராமகிருஷ்ணன், மண்டல செயலாளர் பால குருசாமி, வட்ட செயலாளர்கள் சுரேஷ், சுப்பையா, சரவணன் உள்பட மகளிர் அணியினர், நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.

நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்.

 ஷ்யாம் நீயூஸ் 14.01.2024 நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்! தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கிராமம் காலான்கரை.இங்கு 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு பள்ளி கட்டிடத்தை சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.தற்பொது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 7 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பள்ளியின் சுற்று சுவர் மீது 7லட்சம் மதிப்பீலான கட்டித்தை கட்டிவருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் .டம்மி ஒப்பந்ததாரர்களை வைத்து சென்டர் விடபட்டு கட்டிடம் கட்டும் பணியை பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் பள்ளியின் சுற்று சுவர் மீது கட்டிடம் கட்டி ஊழலில் செய்து வருகிறார் என்று ஊர் பொது மக்கள் கூறுகின்றனர்.இப்பணிகளுக்கு பில் எழுதுவதற்கு பஞ்சாயத்து தலைவின் மகனை பணியில் அமர்த்தி உள்ளனர் என்றும்  இதற்க்கு தூத்துக்குடி வட்டார வளர்ச...

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 09.01.2024 தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 1,200 பேருக்கு 1,750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது . தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1200 ஆட்டோ தொழிலாளர்களுக்கும் தன் கையாள் நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். பொங்கல் தொகுப்பில் கீழ்கண்ட பொருட்கள் இருந்தன 1. ஆட்டோ ஓட்டுநர் சீருடை - ( Pant & Shirt ) ஒரு செட்   2. Uniball eye பேனா - 2 3. பென்சில்  பாக்ஸ் (ஸ்கேல், கட்டர், ரப்பர்) செட் - 1 4. தேர்வு அட்டை - 1 5.போர்வை - 1 6. அரிசி - 5 கிலோ 7. கோதுமை மாவு - 1 கிலோ 8. சமையல் எண்ணெய் - 1/2            லிட்டர் 9. சீனி - 1/2 கிலோ 10. துவரம் பருப்பு - 1/2  கிலோ 11. வத்தல் பொடி - 50 கிராம் 12. சாம்பார் பொடி - 50 கிராம்  13. 3 ரோசஸ் டீ தூள் -  50 கிராம் ஆகியவை இருந்தன   பொங்கல் தொகுப்பை பெ...

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

ஷ்யாம் நீயூஸ் 05.01.2024 தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 1933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை பாதுகாப்புத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றினர அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நிறைவுற்ற சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம், சிதம்பர நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் மற்றும் தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் பாத்திமா நகர் மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம். உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளையும்  காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார், சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி படிப்பகத்...

தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை

 ஷ்யாம் நீயூஸ் 05.01.2024 தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை  தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில்  ஓட்டப்பிடாரம் செக்காரக்குடி குறுக்குச்சாலை புதியம்புத்தூர் சாமிநத்தம் முப்பிலிவெட்டி  குலசேகரநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது .ஏற்கனவே கடந்த டிசம்பர் 17 ,18 அன்று பெய்த அதி கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களிலும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தும் விவசாய நிலங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டது .இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அதிமுக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு!

 ஷ்யாம் நீயூஸ் 04.01.2024 அதிமுக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு!    தூத்துக்குடியை சேர்ந்தவர் ஹென்றி( 61 )இவர் அதிமுகவில்  அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்,  தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினராகவும் உள்ளார் . நாசரேத் திருமண்டல நிர்வாகிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்ட  பொருளாளர் மோகன்ராஜ்க்கு ஆதரவாக திருமண்டல அலுவலகத்திற்க்குள் இவருடன் பலர்  சென்றுள்ளனர்.அப்பபோது தற்போது உள்ள நிர்வாகிகள் தடுத்ததாக தெரிகிறது. அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அலுவலகத்தில் இருந்த ஹரிஷ் ராபின்சன் ஆகிய இருவரும் தங்களை  கம்பி மற்றும் கைகளாலும் தாக்கி காயப்படுத்தியதாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதே போல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொருளாளராக இருந்து வரும் டேவிட் ராஜ் அளித்துள்ள புகாரில் தான் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே பொருளாளராக இருந்த மோகன்ராஜ் அருமை நாயகம் முறை...

தூத்துக்குடி மீனவர்கள் 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்.

 ஷ்யாம் நீயூஸ் 04.01.2024 தூத்துக்குடி மீனவர்கள் 5 நாட்களுக்கு பின்  கடலுக்கு  சென்றனர். காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்தனர்  குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூழல் காற்று வீசக்கூடும் என்பதால் . மாவட்டத்தில் நாட்டு படகு. விசைப்படகு கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  3000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும்  150க்கும் மேற்ப்ட்ட விசை படகுகளும் 5 நாட்கள் கழித்து இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

தூத்துக்குடி மாவட்டம் 03-01-2024 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு இன்று நடிகர் பிரசாந்த் நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக மழை வெள்ளத்தில் மீட்பு பணிகளை தமிழக அரசு காவல்துறை சிறப்பாக செய்தது என அவர் பாராட்டினார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நடிகர் பிரசாந்த் சார்பில் இன்று தூத்துக்குடி ஏ ஆர் எஸ் மஹாலில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டவுடன் பெண்களிடம் இருந்து நடிகர் பிரசாந்த் செல்போனை வாங்கி சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது; பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது கடவுள் அந்த பாக்கியத்தை அளித்திருக்கிறார் இதேபோன்று எல்லாரும் உதவி செய்வார்கள் இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை கூட மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நமது நாடு மிகப்பெரிய நாடு அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை தூர்வார வேண்டும் மேலும் ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் இனிமேல் இதே போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். பேட்டி : நடிகர் பிரசாத்

ஷ்யாம் நீயூஸ் 04.01.2024 தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டன நடிகர் பிரசாந்த் பாராட்டு! மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு 03.01.23 அன்று நடிகர் பிரசாந்த் நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக மழை வெள்ளத்தில் மீட்பு பணிகளை தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சிறப்பாக செய்தது என அவர் பாராட்டினார்.  தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நடிகர் பிரசாந்த் சார்பில் இன்று தூத்துக்குடி ஏ ஆர் எஸ் மஹாலில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டவுடன் பெண்களிடம் இருந்து நடிகர் பிரசாந்த் ச...

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி : தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

   ஷ்யாம் நீயூஸ் 02.01.2023 அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல செயலாளர் கல்விக்குமார்த தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது கலந்துகொண்டார். இதில், 15வது ஓய்வூதிய  ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டி.ஏ வை உடனடியாக வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டியும், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கி உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலக நகர பணிமனை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாத   திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர்,  டேக்.ராஜா, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கப்பல் ராஜன் மண்டல பொருளாளர் லட்சுமணக...