முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி ! அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.

ஷ்யாம் நீயூஸ்

07.12.2023

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி ! அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.  

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி 08.12.2023 மாலை முதல் 10.12.2023 வரை தெர்மல் நகர் கைப்பந்து மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. 

போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகியகீதாஜீவன் ஆகிய நான் துவக்கி வைத்து வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்க இருக்கிறேன். 

இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஏ.பாலகுருசுவாமி வரவேற்புரை வழங்குகிறார். 

மேலும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நம்பிராஜன், மாநகர துணை மேயர் எஸ்.ஜெனிட்டா செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் டி.மேகநாதன், ஜி.ஜெயக்குமார், தொ.நிர்மல்ராஜ், எஸ்.சுரேஷ்குமார், டி.ஏ.ரவீந்திரன், பி.பி.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எம்.ஆரோக்கிய ராபின் அசோகன் நன்றியுரை ஆற்றுகிறார். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000, பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.12,000, மூன்றாம் பரிசு ரூ.10,000/- மும் வழங்கப்படும்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர்களான எஸ்.குருராஜ், டி.மாதேஸ்வரன், கே.கணேசன், ஆர்.லவராஜா, ஆர்.டினோ மாநகர விளையாட்டு அணி துணை அமைப்பாளர்களான எஸ்.செல்வக்குமார், எம்.ராஜா, என்.அன்பழகன், ஜெ.பிரதீப், எல்.சில்வெஸ்டர் சாமுவேல், 60–வது வார்டு கழக நிர்வாகிகள் ஜி.ஆரோக்கியசாமி, எஸ்.சக்திவேல், கே.மூர்த்தி, சி.பெத்துராஜ், ஏ.அல்பர்ட் முத்துமாலை, வி.செல்வி, வி.எட்வர்ட்ஜான், வி.பாஸ்கரன், வீரபத்திரன், எம்.சுரேஷ், பி.மலைச்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

 எனவே கழக நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலா்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...