ஷ்யாம் நீயூஸ்
05.12.2022
தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு !
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் வடிகால் கால்வாய் அப்பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க வேண்டிய இடத்தையும், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், புதிய பேரூந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர்கள் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.