முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ்

06.12.2023

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம்,  மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும் தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும்.

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியான இன்றையதினம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதிபாஸ்நகரில் உள்ள 298 குடியிருப்புகளில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.26.20 இலட்சம் மதிப்பீட்டில் 233 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மீதமுள்ள 65 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.10.98 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக்கட்டிடப் பணிகளையும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.370.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 56 குடியிருப்புகளையும், கூடுதலாக ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 04 குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும், மேலும், 16 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 528 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும், கோமஸ்புரத்தில் ரூ.186.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மின்தகன மேடை கட்டுமானப் பணிகளையும், தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.27.15 இலட்சம் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், குழந்தைகள் நேய உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.27.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தினையும் கலெக்டர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் உரிய காலகட்டத்தில் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


  இந்த ஆய்வின்போது, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபுத்திரன், செயற்பொறியாளர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜாக்லின் அமலா, உதவிப் பொறியாளர்கள் ரவி, பிரான்சிஸ்கா, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்க மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மாவட்ட பிரதிநிதி சப்பானி முத்து, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், ஜோதிபாஸ் நகர் கிளைச் செயலாளர் வேல்ராஜ், மாரியப்பன் மற்றும் கௌதம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...