முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு !

ஷ்யாம் நீயூஸ்
17.12.2023
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு !

 தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் முறையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையாக தேர்தல் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி தேர்தலும் நடைபெற்றது. அதில் 60 வார்டு உறுப்பினர்கள் தேர்வில் திமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றன. மேயராக ஜெகன் பெரியசாமி தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றப்பின் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழக அரசின் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டு புதிய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிதாக கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கப்பட்டு புறநகர் பகுதிகள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும், மக்கள் நலன் கருதி சாலை வசதி, புதிதாக ஏற்படுத்தப்பட்டு அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் புதுமையான மாநகராட்சி பகுதியாக உருவாகுவதற்கு அரசுதுறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் பார்வையிட்டு, மக்கள் நலன் தான் முக்கியம் என்று பாரபட்சமின்றி அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்டமைப்புகளை செய்து வருகிறார். பக்கிள் ஓடை பகுதியில் மழை காலங்களில் வரும் நீர் மட்டும் வருவதற்கும் மற்ற பல்வேறு பகுதிகளிலுள்ள தேவையற்ற கழிவுநீர்கள் தருவைகுளத்தில் உள்ள மறுசுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் பணிகள் இருந்து வருகின்றன. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாநகர பகுதியில் மழைநீர் எங்கும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமாருடன் கொட்டும் மழையில் மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர், பண்டாரம்பட்டி, சங்கரபேரி, பக்கிள் ஓடை முகத்துவாரத்தையும் ராம்நகர், ரஹமத்நகர், உள்ளிட்ட இடங்களில் அவசர நடவடிக்கை மேற்கொண்டு, மழை நீர் வெளியேறுவதை பார்வையிட்டார். இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி மக்கள் நலன் தான் முக்கியம் என்ற தாரக மந்திரத்துடன், மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நடைபெறாத பணிகளை நாங்கள் பொறுப்புக்கு வந்த 20 மாதங்களில் புதிய பணிகள் தொடங்கப்பட்டு, இதில் பல பணிகள் முடிவு பெற்றுள்ளன. எந்த கனமழை பெய்தாலும் மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காதவாறு துரித பணிகள் மேற்கொண்டுள்ளோம். எனவே பொதுமக்கள் யாரும் எந்த பயமும் கொள்ள வேண்டாம் தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உயர்அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் மழைக்காலங்களில் மக்களுடன் உறுதுணையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்கு உடனிருப்பார்கள். ஏதாவது ஒரு பகுதியில் குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாக 18002030401 என்ற கால்செண்டர் எண்ணானது மழை முடியும் வரை 24 மணி நேரமும், மேலும் 8754299969 இந்த வாட்சப் எண்ணிலும் என்னை தொடர்பு கொள்ளலாம் எனது கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமியின் செயல்பாட்டை கண்டு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...