முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு என்ன திண்ணால் பித்தம் தெளியும் ?சமூக ஆர்வலர் கேள்வி ?

ஷ்யாம் நியூஸ்
16.04.2020
ஸ்டெர்லைட் ஆலைக்கு என்ன திண்ணால் பித்தம் தெளியும் ?சமூக ஆர்வலர் கேள்வி ?

ரேசன் அரிசியை, பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் .!குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கோரிக்கை வைத்து உள்ளார் .

கொரானா வைரஸ் தடுப்பு காரணமாக அரசு  பிறப்பித்த உத்தரவின் கீழ் பொதுமக்கள் தங்களது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் இன்னல்களையுடம் தாண்டி  கடந்த சில வாரங்களுக்கு மேலாக வீட்டிலே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.இத்தகைய மக்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட அரசுகள் முயற்சித்து வருகிறது மேலும் தன்னார்வலர்கள் மற்றும் இன்னபிற சுய உதவி அமைப்புகள் பொதுமக்களை சந்தித்து உதவிகள் செய்திட வழிவகைகளை வகுத்துள்ளது.

இத்தகைய சூழலில் ஸ்டெர்லைட் ஆதரவாளரும், இந்து டிரேடர்ஸ் உரிமையாளருமான  பாலா என்பவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் தூத்துக்குடி போல்டன்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் மற்றும் பாலாவின் ஆதரவாளர்கள் இணைந்து  அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசியை தனியார் வேல் பிராண்ட் பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்து உள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட அரிசி பையை பிரித்து பார்த்த பொதுமக்கள் இது ரேசன் அரிசி என்றும் ரேசன் அரிசியை மொத்தமாக கடத்தி அதனை பாலிஷ் (மறு அரவை) செய்து அதனை தனியார் பொன்னி அரிசி பிராண்ட் பையில் வழங்கியதை கண்டு அதிர்ச்சியுற்றதோடு இதற்கு உடந்தையாக இருந்த ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர் பாலாவை எச்சரித்ததோடு அவ்வாறு பெறப்பட்ட அரிசை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர்.

அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி மொத்தமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர் கந்துவட்டி பாலா வசம் சென்றது எப்படி.?

ரேசன் அரிசி மொத்தமாக கிடைப்பதற்கு பாலாவிற்கு உடந்தையாக(துணையாக) இருந்த பொதுவிநியோக திட்ட அரசு  அதிகாரிகள் யார்.?

ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் குறிப்பாக  பாலா மற்றும்  அவரது கூட்டாளிகள்  யாரின் அனுமதியோடு இதுப் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர்.

அரசு சார்பில் வழங்கப்படும் ரேசன் அரிசி யை சட்டவிரோதமாக கடத்தி அதனை முறைகேடாக பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்த ஸ்டெர்லைட் ஆதரவாளர் பாலா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படுமா.?

ரேசன் அரிசியை கடத்தி அதனை பாலிஷ் செய்து பொன்னி அரிசி பையில் அடைத்து சட்டவிரோதமாக  விநியோகம் செய்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்  பாலா, முறைகேடாக பை வழங்கிய வேல் அரிசி நிறுவனம், மற்றும் அரிசி கடத்தலை கண்டுக்கொள்ளாத அரசு அதிகாரிகள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க படுமா என  சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கேள்வி எழுப்பி உள்ளார் .மற்றும் ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் . தூத்துக்குடியில் தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம்  என்ன திண்ணால் பித்தம் தெளியும் என தெரியாமல் மக்களுக்கு தவறான செய்தியை பரப்பியும் மக்களுக்கு ஆசை வார்த்தை கூறியும் ஏமாற்றி வருவதை இத்தோடு  நிறுத்து கொள்ளவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர் .இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...