முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் கொடுத்த கொரானா நிதியை திருப்பி கொடுக்கவேண்டும்! ஸ்டெர்லைட் ஆலைக்கு வழுக்கும் எதிர்ப்பு!

ஷ்யாம் நியுஸ்
23.04.2020

ஸ்டெர்லைட் கொடுத்த கொரானா நிதியை திருப்பி கொடுக்கவேண்டும்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை!

ஸ்டெர்லைட் நிறுவனம் கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாய் வழங்கியதை தமிழக அரசு திரும்ப ஸ்டெர்லைட் நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் மூடக்ஆலையைமூட கோரியநடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடில் 13க்கும்  மேற்ப்பட்ட கொல்லப்பட்டனர்  இதனை தொடர்ந்து தமிழக அரசு ஆலையை நிரந்தரமாய் மூடுவதற்காக அரசாணை பிறப்பித்து, பூட்டி சீல் வைத்துள்ளது.

அதன் பின்பு ஆலை தரப்பில் தமிழக அரசாணையை இரத்து செய்து, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தமிழக அரசு, உச்ச நீதிமன்ற பிரபல சீனியர் வழக்கறிஞர்களை நியமித்து சிறப்பாக வாதாடி உள்ளதை நாங்கள் அறிவோம். இதனால் தமிழக அரசின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாயை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

எங்களது கிராமங்களில் ஸ்டெர்லைட் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், மக்களை பிளவுபடுத்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு  சில உதவிகள் வழங்கப்பட உள்ளதை அறிந்து தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு உள்ளோம். ஆனால் தற்போது தமிழக அரசிற்கு நிவாரண நிதி என்ற பெயரில் ஸ்டெர்லைட் கொடுப்பதை நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?

ஸ்டெர்லைட் நிறுவன நிர்வாகிகள், அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுத்த ஐந்து கோடியை வைத்து தமிழக அரசை அந்த நிறுவனம் வளைத்து போட்டுவிட்டதாகவும், இனி தமிழக அரசின் நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட எல்லாமே நீர்த்துப்போகும் என்று ஒரு பீதியை பரப்புகிறார்கள்.

இதன்மூலம் தமிழக அரசுடன் ஸ்டெர்லைட் நிறுவனம் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வதால், வரவிருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று ஆலை தரப்பில் தூத்துக்குடி மக்களிடம் ஒரு செய்தியை திட்டமிட்டே கசிய விடுகிறார்கள்.

இதனால் "ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுவிடும்" என்று தூத்துக்குடி மக்கள் பயப்படுகிறோம்..

தமிழக அரசு 5 கோடி பெற்றுக் கொண்டதன் மூலம், அரசு  ஸ்டெர்லைட்டை மூட இதற்கு முன்னர் எடுத்த எல்லா நடவடிக்கைகளும் நீர்த்துப்போய், கேள்விக்குள்ளான சூழ்நிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனம், தமிழக அரசிடம் 5 கோடியை நிவாரண உதவித் தொகையாக கொடுத்துவிட்டு, தமிழக அரசிற்கு லஞ்சம் கொடுத்து சரிக்கட்டி விட்டதாக ஆதரவாளர்கள் மூலம் பொய்  செய்தியை அரசிற்கு எதிராக பரப்பி வருகிறார்கள்.
மேலும் தமிழக அரசின் பல்வேறு துறைகளையும், நீதிமன்றத்தையும் திசை திருப்பும் செயலாகும்.
எனவே, . தமிழக முதல்வர் ,5 கோடி ரூபாயை தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளின் படி ஸ்டெர்லைட் நிறுவனத்திடமே திரும்ப கொடுத்து விடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என்றும்
அதைப்போல ஸ்டெர்லைட் நிறுவனம் கொரோனா நிவாரண பொருட்களை நேரடியாக மக்களிடம் எந்தவித சமூக இடைவெளியையும் பின்பற்றாமல், ஆதரவாளர்களை வைத்து கொடுத்து வருகிறார்கள். நிவாரண பொருட்கள் கொடுப்பதை சாக்காக வைத்து, முறைகேடாக பயன்படுத்துவதற்காக பயனாளர்களின் ஆதார் கார்டுகளை பெற்று, ஆலையை மீண்டும் திறக்க விஷமப் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்ரவிடவேண்டும் என்றும் தமிழக முதல்வர்க்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு எழுதிய மணுவில் தெரிவித்துள்ளனர்.


                           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...