முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ?

ஷ்யாம் நியூஸ் 
30.04.2020

தூத்துக்குடியில்  பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை  -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ?

தூத்துக்குடியில் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் இருவர் மீது பீடி குடித்ததாக தூத்துக்குடி சிபிகாட் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர் .
கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஏழை மக்கள் கூலி தொழிலாளிகள் இருப்பதை உண்டு 
வீட்டில் ஒரு மாதமாக இருந்து வந்தனர் .இந்த நிலையில் தமிழக அரசு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவங்கள் செயல் பட அனுமதி அளித்தது .
தூத்துக்குடி சிபிகாட் பகுதியில் மத்திய அரசு நிறுவனமான CWC குடோனில் கண்டைனர் பெட்டியில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் பணி நடந்து உள்ளது .8 மணிக்கு தொடங்கிய பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி மு .பாலமுருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் காலை 9.30 மணியளவில் 
குடோன்வெளிப்புறம் உள்ள கோட்டை சுவர் அருகே  சிறுநீர் கழித்துவிட்டு களைப்பு போக சமூக இடைவெளி விட்டு இருவரும் பீடி குடித்ததாக தெரிகிறது .அப்போது அந்த வழியாக வந்த சிபிகட் காவல்த்துறைனர் இருவரின் செல்போனையும் பறித்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர் அங்கு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கூப்பிடும் பொது வரவேண்டும் என திருப்பி அனுப்பி வைத்து உள்ளனர் .திரும்பி வரும் பொது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி முடிந்து விட்டதால் கூலி கிடைக்காமல் வீடு திரும்பிவிட்டனர் .ஏற்கனவே வறுமை 600 ரூபாய் கூலி கிடைக்கும் என்று வேலைக்கு வந்தால் பீடி குடிதற்ககாக எங்களை அழைத்து கொண்டு போய் கேஷ் போட்டுவிட்டார்கள் வேலையும் பறிபோய்விட்டது 600 ரூபாய் கூலியும் கிடைக்கவில்லை .வழக்கிற்கு நீதிமன்றத்தில் பணமும் கட்டணுமாம் .ஏழைகளை தேடி தேடி அவர்கள் வயிற்றில் அடிக்கும் காவல்த்துறை மீதி மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வயிற்று பிழைப்புக்கு  வேலைக்கு வந்த கூலி தொழிலிகளிடம் வீரத்தை காட்டுவது சரிதானா என்றும் கூலி தொழிலிகள் வேதனை பட்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...