முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்று இல்லை_ ஆட்சியர் தகவல்.


ஷ்யாம் நியூஸ்
28.03.2020
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்று இல்லை_ ஆட்சியர் தகவல்.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விரைவாக கிடைக்க வியாபாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
144 தடை உத்தரவை தொடர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிறமத்தை சரி செய்ய வாகனங்கள் மற்றும் அதில் ஈடுபடும் பணியாளர் களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.உற்பத்தி பொருட்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்ல வாகனங்கள் நகர்வதர்க்கு தாலுகா வாரியாக அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1621   நபர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என கணக்கு எடுக்கப்பட்டு தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் 41 குழுக்கள் அமைத்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தேடிவருகின்றனர்.இந்த நோய் 99.99%  வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் வந்துள்ளதால் இவர்களை கண்காணிப்பதில் திவிரபடுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 நபர்கள் கொரானா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை .தற்போது 3நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் 108மற்றும் 102 க்கு தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.
வெளிமாவட்ட நபர்கள் வராமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 15 செக்போஸ்ட் போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ஹோட்டல்கள் திறந்து இருக்கும் ஆனால் பார்சல் உணவு மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவார்கள்
முன்னேச்சரிக்கை நடவடிக்கை யாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது அதுபோன்று கோவில்பட்டி விளாத்திகுளம் திருச்செந்தூர் திருவைகுண்டம் போன்ற தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன
பொதுமக்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள்  குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட குழு அமைக்கப்படும்.
அனைத்து தெருக்களிலும் கிராமங்களிலும் கிரிமிநாசினி தெளிக்கும் பட்டு வருவதோடு விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...