தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள கலைஞானபுரம், அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நல்லன் மகன் மாரிசாமி (26), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 3 மாத காலமாக தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் வற்புறுத்தி வந்துள்ளார். அவரது தந்தை இன்று சில ஆண்டுகள் போகட்டும் என்றாராம்.
இதனால் திருமண ஏக்கத்தில் இருந்து வந்த மாரிசாமி, கடந்த 24ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடலில் பலத்த தீக்காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.