முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரோனா எதிரொலி தூத்துக்குடியில் மூடாமல் செயல்படும் வணிக வளாகங்கள் !

கரோனா எதிரொலி தூத்துக்குடியில் மூடாமல் செயல்படும் வணிக வளாகங்கள் !


கரோனா வைராஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவில் உருவான கரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்திலேயே அந்த வைரஸ் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஓட்டல், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி நகரில் உள்ள லாட்ஜ்களில் தங்கியுள்ள வெளி மாநில, வெளிநாட்டினர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி நகரில் உள்ள டிஎஸ்எப் பிளாசா, வேலவன் ஹைபர் மார்க்கெட், பெரிசன் பிளாசா ஆகிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை காவல்துறை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் வருகிற 31ம் தேதி வரையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கபட்டுள்ளது. புதிதாக திருணங்கள் புக் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழா நடைபெற்ற பின்னரும், நடைபெறும் முன்னரும் கிரிமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், ஆம்னி பஸ்களில் ளில் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில தெளிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும் முன்னரும் பின்னரும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுஇடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் 10 இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால் தூத்துக்குடி  ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் மருந்து கடை இருப்பதாக கூறி ஆட்களை உள்ளே அனுமதித்து  செயல்படுகிறது மற்றும்  தூத்துக்குடி மையப்பகுதியில் வசந்த் &கோ  வணிக வளாகமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...