அம்மாஅரசு
16 அக்டோபர் 2018
அரசு ஊழியர்கள் யார்?
பொதுமக்களுக்கு இவர்கள் அதிகாரிகளா? அல்லதுஎஜமானர்களா?
இவர்களின் பணிதான் என்ன?
இவர்களின் கடமை தவறிய செயல்களை, அதிகாரதுஷ்பிரயோகங்களை, சட்ட விரோத காரியங்களை தட்டிக் கேட்பதுஎப்படி?
இதுபோன்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழாமல்இருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காகதேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாகஉருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணிசெய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள்நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே!
மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள்
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம்வழங்கப்படுகிறது.
பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும்ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல.
ஆனால் உண்மையில் அரசு ஊழியர்கள் எப்படிபொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்களை அரசர்கள் போல நினைத்துகொள்கின்றனர். இவர்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம்உள்ளது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களைஅலைக்கழித்து மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.
உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், நியாயத்தைகேட்கும் பொதுமக்கள் என அனைவர் மீதும், அரசுப் பணியைசெய்ய விடாமல் தடுத்ததாக பொய் புகார் அளித்துகாவல்துறையினர் உதவியுடன் வழக்கு பதிவு செய்கின்றனர்.
அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டு சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் ஏழை,எளிய மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை.பொதுமக்களிடம் கையேந்தி லஞ்சம் என்னும் பிச்சைஎடுக்கின்றனர்.
எத்தனையோ சட்டங்களின் இருந்தும் இதுபோன்ற அரசுஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்?அதற்கான காரணம் என்ன? என்பதை யோசித்து பாரத்தால் அற்பகாரணங்களால் தான் தப்பி விடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக....
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னைஉயர்நீதிமன்றம் கடந்த 01.08.2014 ஆம் தேதி ரிட் மனு எண்.20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுமக்கள் அரசுஅலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21.09.2015 ஆம்தேதி அரசாணை எண். 99 ஐ வெளியிட்டது.
ஆனால் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவையோ அல்லதுஅரசாணை எண் 99 யையோ யாராவது மதிக்கிறார்களா?
அப்படி என்றால் இவர்களை எப்படி தண்டிப்பது?
மக்கள் பணி செய்யாத, செய்ய தவறுகிற அரசு ஊழியர்கள்அனைவரும் கடமை தவறிய கேடு கெட்ட அலுவலர்களே என்றுசட்டம் கூறுகிறது. மேலும் இதுபோன்ற அலுவலர்களுக்கு ஒருவருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என இந்தியதண்டனைச் சட்டம் பிரிவு 166 கூறுகிறது.
ஆனால் தண்டனை பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்கிறவிழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அற்ப காரணங்களின்அடிப்படையில் தான் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். சட்டத்தில் உள்ள அந்த ஓட்டைஎன்ன?
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 தான் அந்த ஓட்டை.
Cr. P.C. sec 197 - Prosecution of judges and public servants
பொது ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கவேண்டுமென்றால் மத்திய அல்லது மாநில அரசிடம் அனுமதிபெற வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் தாக்கல்செய்யப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் கு. வி. மு. ச பிரிவு 197 கூறுகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 166(அ), 166(ஆ), 354, 354(அ), 354(இ), 354(ஈ), 370, 375, 376, 376(அ), 376(இ), 376(ஈ), 509 போன்ற குற்றங்களை ஒரு அரசு ஊழியர் செய்தால் அதற்குஅனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஊழல்,பொய் ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல் போன்றகுற்றங்களுக்காக வழக்கு தொடரவும் அனுமதி பெறதேவையில்லை.
அரசு ஊழியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பலவழக்குகளை பார்த்தால், அநேகமாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 197 ஐ காரணம் காட்டி தப்பி சென்றிருப்பதாகவேதுலங்குகிறது.
எனவே ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்யத்தவறினால் அவர்மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர்அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டுபதிவுத் தபாலில் அனுப்பி அதன்பிறகு தான் குற்ற வழக்குதாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தவறு செய்தஅதிகாரி ஈசியாக தப்பி விடுவார்.