முதல் திருமணத்தை மறைத்து இன்னொருவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் காவல்துறை
ஷ்யாம் நீயூஸ்
04.01.2023
முதல் திருமணத்தை மறைத்து இன்னொருவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் காவல்துறையினர்.
தூத்துக்குடி சுந்தரராமபுரம் பகுதியைச் சார்ந்தவர் சாந்தி, லட்சுமணன் தம்பதியர். இவர்களது ஒரே மகள் சுந்தர மீனாட்சி என்ற ஆர்த்தியை சென்னையைச் சார்ந்த மணிகண்டன் என்பவருக்கு 2013 ஆம் ஆண்டு மணமுடித்துக் கொடுத்தனர். இந்த தம்பதியினருக்கு மிருதுள் முருகன் என்ற ஆண் குழந்தை உள்ளது குழந்தை பிறந்த சிறிது நாளில் வரதட்சணை கேட்டு சுந்தர மீனாட்சியை கணவர் மணிகண்டன் மற்றும் அவரது தாய் தந்தையினர் கொடுமைப்படுத்தியதாக சுந்தரம் மீனாட்சி மற்றும் அவரது தாய் தந்தை கூறுகின்றனர். இது சம்பந்தமான புகாரை அம்பத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் மணிகண்டன் ஏற்கனவே திருமணம் ஆகி 8 வயது குழந்தையுடன் இருக்கும் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா தேவி என்கின்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் என்றும் முதல் மனையிடம் விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இந்திய தூதரகத்தை ஏமாற்றி தாராதேவி தான் முதல் மனைவி என்று பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்று சுற்றி வந்துள்ளனர் என்றும் ,இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் அம்பத்தூர் காவல் நிலைய காவலர்கள் மணிகண்டன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற பின்பும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியாமல் தமிழக காவல்துறையினர் தடுமாறி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தாராவிற்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்தது அந்த குழந்தையை உல்லாசத்திற்கு இடையூராக இருப்பதாக நினைத்து கொலை செய்து விட்டதாகவும் சுந்தர மீனாட்சியின் தாய் சாந்தி கூறுகிறார். இதுகுறித்து 20 10 2022 அன்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்புளரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சாந்தி புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதற்காக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பினார் மற்றும் நீதிமன்றம் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டி சென்னை ஆட்சித் தலைவருக்கும், அனைத்து பெண்கள் காவல் நிலையம் அம்பத்தூர் சென்னைக்கும் மற்றும் அம்பத்தூர் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்க வேண்டி கேட்டுக் கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்தார். இதுவரை முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் தமிழக காவல்துறையினர் ஆஜர் படுத்த தவறி வருகின்றனர் என்றும் இதனால் எங்களுக்கும் என் பெண் குழந்தைக்கும் என் மகளின் மகனுக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதோடு எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு மணிகண்டனை கைது செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்று பெண்களை ஏமாற்றும் பேர்வழிகளுக்கு தக்க பாடமாக அமையும் என்றும் தெரிவித்தார்.மேலும் 7 ஆண்டுகளாக போராடி பார்த்தும் காவல்துறையினர் செவி சாய்க்க மறுத்து வருகின்றனர்.
எனவே முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டால் மட்டுமே எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்றும் தெரிவித்தனர் தங்கள் நிலமை வேறு எந்த பெண் பிள்ளைக்கும் வரக்கூடாது என்றும் பொதுமக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் பிட் நோட்டிஸ் அடித்து தூத்துக்குடி மற்றும் சென்னை தலைநகரங்களில் வினியோகித்து வருவதாகவும் தெரிவித்தார் அந்த பிட் நோட்டீஸில் வழக்கின் தன்மையும் வழக்கின் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.