முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

ஷ்யாம் நீயூஸ்

04.01.2022

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி!

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்   தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில், அதிமுக  அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் , முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, எம்ஜிஆரின் பிறந்த தின விழா, மற்றும் அதிமுகவின் 51 வது ஆண்டு பொன்விழாவை  முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை,எளிய மக்களுக்கு நடைபெறும்  சமத்துவ சமுதாய திருமணவிழா அழைப்பிதழை தெற்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

ஒவ்வொரு ஆண்டும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த தினம் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த  தினம் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் புரட்சித்தலைவி அம்மாவின்  பிறந்தநாள் விழா, பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பிறந்த தின விழா, மற்றும் கழக 51 வது ஆண்டு பொன்விழாவை  முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை,எளிய மக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணவிழா கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் 

திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் இன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது 

ரூ. 1000 கூட கொடுக்க மனம் இல்லாமல் அதிலும் கரும்பு கூட கொடுக்க மனம் இல்லாமல் இரும்பு மனம் படைத்தவராக இருந்தார். எடப்பாடியார் குரல் கொடுத்த பிறகு தான் பொங்களுக்கு கரும்பு வழங்க அரசாணை வெளியிட்டுள்ளார். திமுக வெளியிட்ட 505 தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு தேவையான வாக்குறுதி நிறைவேற்ற வில்லை, இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி விண்ணைமுட்டும்  அளவு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல மேதகு ஆளுநர் உரையில் கடந்த ஆண்டு கொடுத்ததையும், 

110 விதியில் அறிவித்ததை இன்றும் நிறைவேற்றவில்லை.

இரண்டு நிதிநிலை அறிக்கை அவர்கள் தாக்கல் செய்கிறார்கள் வேளாண் துறைக்கு என்று ஒரு பட்ஜெட், நிதி நிலை அறிக்கை பட்ஜெட் அதில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மானிய கோரிக்கையில் அமைச்சர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை என கூறிய அவர் இப்படி ஏறத்தாழ 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் அறிவிப்பாக உள்ளதை தவிர செயல் வடிவம் ஆகவில்லை என்றார். அம்மாவின் திட்டங்கள் தாலிக்கு தங்கம்திட்டத்தை தொடங்கி, அம்மா மினி கிளினிக், அம்மா உப்பு, அம்மா குடிநீர் என இன்றைக்கு இப்படி மக்களுக்கு  பயனுள்ள அம்மாவின் திட்டங்களை முடக்கி அதுக்கு மூடு விழா காண்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தோடு வீட்டிற்கு முன்பாக  மதுவிலக்கு போராட்டம் செய்தார். இன்று அவர் நினைத்தால் பூரண மதுவிலக்கை செயல்படுத்த முடியும் ஆனால் அவர் இதுவரை செயல்படுத்த முன்வரவில்லை எங்கு பார்த்தாலும் அனுமதி இல்லாமல் டாஸ்மார்க் கடைகள் இயங்குவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆங்காங்கே நடைபெறும் போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்து ஆடுகிறது இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மதுபானகடைகள் அரசின் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது என்றார்.

ஒவ்வொரு நாளும் மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்ற அவர், மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள் எப்போது தேர்தல் வந்தாலும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் மக்கள் நம்பிக்கை பெற்று மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வருவார் என்றார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...