முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஷ்யாம் நீயூஸ்

13.01.2023

தூத்துக்குடி அருகே ஆன்லைன்  ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி அருகே ஆன்லைன்  ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - ஆன்லைன் ரம்மியை எப்படியாவது தடை செய்யுங்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டிதந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் அருகே உள்ள இராமநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் இவர் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

பாலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார் இந்நிலையில் இந்த ரம்மி விளையாட்டில் ஏற்கனவே ரூபாய் 3 லட்சத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாலனின் தந்தை ஆவுடையப்பன் பாலனிடம் ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்து வங்கியில் கட்டச் செல்லியுள்ளார்

ஆனால் பாலன் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார் இதன் காரணமாக விரக்தி அடைந்த பாலன் நேற்று தனது நண்பர் செல்போனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 50 ஆயிரத்தை இழந்துவிட்டேன் எனவே எனது முடிவை நானே தேடிக்கொள்கிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக பாலனின் தந்தை ஆவுடையப்பன் அளித்த புகாரை தொடர்ந்து பாலனின் உடலை மற்றும் அவரது செல்போனை கைபற்றி  தட்டப்பாறை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தையும் பிதியையும் உருவாக்கியுள்ளது.இறந்த பாலனின் அண்ணன் மனைவி நம்மிடம் கூறுகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் தடைசெய்யவேன்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நாங்கள் எங்கள் தம்பியை இழந்து தவிக்கிறோம் தயவு செய்து எந்த தமபிமார்களும் ஆன்லைன் ரம்மியை விளையாடாதிர்கள் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...