தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஷ்யாம் நீயூஸ்
13.01.2023
தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - ஆன்லைன் ரம்மியை எப்படியாவது தடை செய்யுங்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டிதந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் அருகே உள்ள இராமநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் இவர் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
பாலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார் இந்நிலையில் இந்த ரம்மி விளையாட்டில் ஏற்கனவே ரூபாய் 3 லட்சத்தை இழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலனின் தந்தை ஆவுடையப்பன் பாலனிடம் ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்து வங்கியில் கட்டச் செல்லியுள்ளார்
ஆனால் பாலன் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார் இதன் காரணமாக விரக்தி அடைந்த பாலன் நேற்று தனது நண்பர் செல்போனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 50 ஆயிரத்தை இழந்துவிட்டேன் எனவே எனது முடிவை நானே தேடிக்கொள்கிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக பாலனின் தந்தை ஆவுடையப்பன் அளித்த புகாரை தொடர்ந்து பாலனின் உடலை மற்றும் அவரது செல்போனை கைபற்றி தட்டப்பாறை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தையும் பிதியையும் உருவாக்கியுள்ளது.இறந்த பாலனின் அண்ணன் மனைவி நம்மிடம் கூறுகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் தடைசெய்யவேன்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நாங்கள் எங்கள் தம்பியை இழந்து தவிக்கிறோம் தயவு செய்து எந்த தமபிமார்களும் ஆன்லைன் ரம்மியை விளையாடாதிர்கள் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.