முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.


தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள ஸ்காட் நிறுவன அலுவலக வளாகத்தில் உப்பள தொழிலாளர்களுடன் ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் கலந்துரையாடல் நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில் பெண் தொழிலாளர்கள்  தாங்கள் பணிபுரியும் பல உப்பளங்களில் அடிப்படை வசதிகளான நல்ல குடிநீர் மற்றும் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர உப்பள முதலாளிகளிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் உப்பளத்தில் பணிபுரியும் போது உப்பில் சூரிய ஒளி எதிரொளித்து கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் உப்பு நீரில் தொடர்ந்து பணிபுரிவதால் கால் கைகள்  தோல் நோயால் சேதம் அடைந்து வருவதாகவும் அதற்காக மருத்துவ முகாம் இப் பகுதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள் அடையாள அட்டை,  ஆதார் இணைப்பு போன்ற முகாம்கள் தங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் ,தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் சென்று அங்கன்வாடியில் படிக்க செல்வது கடினமாக உள்ளது ஆகவே எங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டி தர வேண்டும் , 350 க்கு மேற்பட்ட குடும்ப அட்டை உள்ளதால் ரேஷன் கடை ஒன்று இப்பகுதியில் கட்டி தர வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை வைத்தனர். இதனைக் கேட்டுக் கொண்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ வரும் 7,8 தேதிகளில் மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்து தருவதாகவும் நடமாடும் ரேஷன் கடை உடனடியாக ஏற்பாடு செய்த தருவதாகவும் மற்றும் மற்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் அதனைத் தொடர்ந்து அங்குள்ள உப்பளம் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்திகளிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது இதில் 50 ஆயிரத்திறக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர் அவர்களுக்கு தேவையான  அடிபடை வசதிகள் மற்றும் அவர்கள் வைத்த  கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். உடன் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் சமூக ஆர்வலர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...